Tuesday, June 17, 2008

தனி நபர் பொறுப்பு -மீராபாரதி– Individual Responsibility

தனி நபர் பொறுப்பு -மீராபாரதி– Individual Responsibility
இக் கட்டுரை இதுவரை நான் எழுதிய, பயணித்த வாழ்வின் ஒரு முடிவுரையாக இருக்கலாம். அல்லது ஒரு புதிய பயணத்திற்கான ஆரம்பவுரையாக இருக்கலாம். எதுவாக இருக்கும் என்பதை, நிகழ்காலம் உருவாக்கும் நிகழ்வுகளினதும் அதன் விளைவுகளினதும் அடிப்படையிலே எதிர்காலமே பதில் கூறக் கூடியது. ஆகவே முடிவை காலத்திடம் கைவிட்டு என் பொறுப்பை (responsiblity) நிறைவேற்றிக்கொண்டு, இப் பயணத்தை தொடர்கின்றேன்.
ஒவ்வொரு மனிதரும் தனித்துவமானவர்கள் (unique) . சுதந்திரமானவர்கள்(independents). அதேவேளை ஒருவரில் ஒருவரும் மற்றும் முக்கியமாக இயற்கையிலும் தங்கியிருப்பவர்கள் (interdependent). இந்தடிப்படையில் இன்று இந்த உலகமும் மனித சமூகமும் வந்தடைந்துள்ள நிலைக்கும் இன்று நடைபெறும் அனைத்து நிகழ்வுகளுக்கும்; ஒவ்வொரு மனிதர்களும் பொறுப்பானவர்கள். இச் சம்பவங்களுடன் நேரடியாக தொடர்பு இல்லாதிருப்பினும் மறைமுகமான தொடர்புடையவர்கள். ஏனனில் இச் சம்பவங்கள் ஒவ்வொரு மனிதருடைய வாழ்க்கையிலும் ஏதோ ஒருவகையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றமை தவிர்க்கமுடியாத ஒரு நிகழ்வாக அமைகின்றது. ஆகவே ஒவ்வொரு மனிதரும் நடைபெறும் நிகழ்வுகளுக்கு பொறுப்பானவர்கள் (response) மட்டுமல்ல அவற்றுக்கு பொறுப்புடன் பதிலளிக்க (responsiblity) வேண்டியவர்களுமாகின்றனர். நமது பொறுப்புணர்வை (responsiblity) உணர்ந்து மதித்து நடக்கும் பொழுது தான் நமக்கான சுதந்திரமும் கிடைக்கின்றது. சுதந்திரம் என்பதே நமது முடிவுகளுக்கு ஏற்ப பொறுப்புணர்வுடன் செயற்படுவதே. ஆனால் பொதுவான மனித வாழ்க்கை மந்தைக் கூட்டங்களின் வாழ்க்கையாகவே அமைந்துவிடுகின்றது. மனிதர்கள் தமது கடிவாளங்களை சிலரிடம் கொடுத்துவிட்டு பொறுப்பற்று திரிகின்றனர். சுhதாரண வாழ்க்கையில் மட்டுமல்ல விடுதலைக்காக சுதந்திரத்திற்காகப் போராடுகின்றன மனிதர்களும் தமது கடிவாளங்களை தலைமைகளிடம் கையளித்துவிட்டு மந்தைக்கூட்டங்களாக கேள்விகள் ஏதுவுமின்றி பின்தொடர்கின்றனர். பெரும்மான்மையான மனிதர்களுக்கு பொறுப்புணர்வுடன் செயற்படுவதற்கு விருப்பமில்லை. ஏனனில் அது ஆபத்தானது. ஆனால் சுதந்திரம் மட்டும் வேண்டும். தூரதிர்ஸ்டவசமாக சுதந்திரமும் பொறுப்புணர்வும் ஒன்றுடன் ஒன்று பிரிக்கமுடியாதவாறு ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாக இருக்கின்றன. இக் கருத்தை பின்புலமாக கொண்டு பார்க்குமிடத்து இலங்கையின் இன்றைய நிலைமைகளுக்கும் முரண்பாடுகளுக்கும் சிங்கள மக்கள் எதிர்நோக்கும் சமூக, பொருளாதார பிரச்சனைகளுக்கும் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் சமூக,பொருளாதார, இன பிரச்சனைகளுக்கும் அவர்களது விடுதலைப்போராட்டம் இன்று வந்தடைந்துள்ள இன்றைய நிலைமைக்கும் இலங்கையில் வாழ்ந்த வாழ்கின்ற ஒவ்வொரு மனிதர்களும் தெரிந்தோ தெரியாமலோ புரிந்தோ புரியமலோ ஏதோ ஒருவகையில் பொறுப்பானவர்கள் (responsible). என்பது ஒவ்வொருவரும் ஏற்றுக்கொள்ளவேணடிய கசப்பான ஒரு உண்மை.
பொதுவான வரலாற்றில்,சுமூகம் பெண்களை அடக்கி அடிமைகளாக பயன்படுத்திக்கொண்டிருக்கின்ற ஆரம்;ப காலத்திலிருந்து இன்றைய காலம்வரை, அதன் சாதகத்தன்மைகள் தம் அதிகார வாழ்வுக்குப் பயன்படுத்திய ஆண்களும், பிழை என புரிந்திருந்தும் பேசாதிருந்த அறிவுஜீவிகளும், மேலும் பெண்ணடிமைத்தனம் சரியானது என நம்பிய ஆண்களும், அடக்குமறைகளுக்கு எதிராக போராட முடிந்தும் செயலற்றிருந்த அதிகாரமையங்களிலிருந்த பெண்களும், பெண்ணடிமைத்தனத்தை ஏற்றுக்கொண்ட பெண்களும் ஆணாதிக்க கருத்தியலினடிப்படையிலமைந்த ஆயத விடுதலைப் போராட்டத்தில் பெண்களை பயன்படுத்(திய)துகின்ற போதும் அதற்கு எதிராக குரல் கொடுக்காதிருக்கின்ற மற்றும் ஆதரிக்கின்ற ஒவ்வொரு மனிதர்களும் பெண் அடக்குமுறை தொடர்வதற்குப் பொறுப்பானவர்களே (responsible).
சாதிய அடக்குமறைகளை சமூகத்தில் நடைமுறைப்படுத்திய சாதி அதிகார படிமுறையில் மேலடுக்குகளிலிருந்த ஒவ்வொரு மனிதரும் மற்றும் தமது குடும்பங்களில் சாதிய கருத்துக்களை உட்புகுத்தி ஆக்கிரமித்தவர்களும் இவற்றை அறிந்தும் அறியாதது போல இருந்தவர்களும் கண்டும் காணாததுபோல்; இருந்தவர்களும் சாதிய அடக்குமுறை அடையாளங்களை தலித்தியம் என்ற பெயரில் தொடர்ந்தும் காவித்திரிபவர்களும் இச் சாதிய அடக்குமுறை தொடர்வதற்குப் பொருப்பானவர்களே (responsible).
மத அடிப்படையில், ஒவ்வொரு மனிதர்களின் வளர்ச்சிகளையும் முடக்கி மனிதர்களை மந்தைகளாக்கி தம் மதங்களை பின்பற்ற வலியுறுத்திய ஒவ்வொரு மதமும் அதன் தலைவர்களும் மற்றும் மதங்களை கேள்விகள் ஏதுவுமின்றி பின்பற்றும் மனிதர்களும் இன்றைய மத முரண்பாடுகளுக்குப் பொறுப்பானவர்களே (responsible). குழந்தைப் போராளிகள் என்பது எந்தளவிற்கு பிழையானதோ, எந்தளவிற்கு தனி மனித சுதந்திரத்தை உரிமையை மறுப்பதோ அதேயளவு சிறுவயதிலையே மதத் தூறவிகளாக குழந்தைகளை மாற்றி அவர்களை காயடிப்பதும் மனித உரிமை மீறல்களே. குழந்தைப் போராளிகள் தொடர்பாக கேள்வி எழுப்புகின்றவர்கள் இது தொடர்பாக மூச்சும் வீடாமலிருப்பது மதங்கள் எந்தளவிற்கு மனிதர்களை ஆக்கிரமித்து ஆதிக்கம் செய்கின்றது என்பதற்கு சிறந்த சான்று. இது தொடர்பாக எதிர்ப்புக் குரல் கொடுக்காது செயற்படாது இருப்பவர்களும் மத முரண்பாடுகள் மட்டுமல்ல குழந்தைப் போராளிகள் உருவாவதற்கும் காரணமாகவும் பொருப்பானவர்களுமாக (responsible). இருக்கின்றனர்.
பொருளாதார சுரண்டல்களை பால் சாதி இன மதங்களுக்கு அப்பாற்பட்டு நடைமுறைப்படுத்தி ஏழைகளை உருவாக்கிய அனைத்து இன மத சாதியைச் சேர்ந்த பணக்காரர்களும், தாம் ஏன் ஏழைகளாகவே இருக்கின்றோம் என அறிந்தும் செயலற்றிருக்கும் அணைத்துப்பிரிவினர்களும், இதைப் பற்றி அறியாது ஏற்றுக் கொண்டு வாழும் ஏழைகளும் இச் சுரண்டல்கள் தொடர்வதற்கு பொருப்பானவர்களே (responsible).

இன அடிப்படையிலான அடக்குமறைகளையும் அழிவு நடைவடிக்கைகளையும் தமது சுய இலாபங்களுக்காகவும் நமது பிற்போக்கான நம்பிக்கைகளுக்காகவும் முன்னெடுத்த பெரும்பான்மை இனத் தலைமைகளும் அவர்களுக்கு ஆதரவளித்த மக்களும் மற்றும் இன அடிப்படையில் அடக்குமுறைக்குள்ளான மக்களும் அதன் தலைமைகளும் சரியான வழியில் அடக்குமுறைகளுக்கு எதிராக போராடாமல் வெறும் உணர்ச்சிபூர்வமாகவும் பிற்போக்குத்தனமாகவும் போராட்டத்தை முன்னெடுத்தவர்களும் அதற்கு ஆதரவளித்தவர்களும் இன்றைய இன முரண்பாடுகளின் வளர்ச்சிக்கும் அதற்கான தீர்வின்மைக்கும் பொறுப்பானவர்களே (responsible).

தேசிய விடுதலைக்காக ஆயத விடுதலைப் போராட்டத்தை பெரும்பான்மை அரசுக்கு எதிராக முன்னெடுத்தபோதும் பெரும்பான்மை இன மக்களை மனிதநேயமின்றி கொலை செய்தபோதும் இயக்கங்களுக்குள் சகோதரப் படுகொலைகள் நடைபெற்றபோதும் இயக்கங்கங்களுக்கு இடையில் மோதல்கள் நடைபெற்றபோதும் இயக்கங்களை தடை செய்து அழித்தபோதும் பேசாதிருந்த செயற்படாது இருந்த மனித உரிமைவாதிகளும் மக்களும் இன்றைய தமிழ் மக்களினதும் விடுதலைப்போராட்டத்தினதும் நிலைமைகளுக்கும் பொறுப்பானவர்களே (responsible).

மேலும் இவற்றை எல்லாம் அறிந்து ஆய்வுகள் மட்டும் செய்வதுடன் தம்மை மட்டுப்படுத்திக் கொண்டு நடைமுறையில் மக்களுடன் இணைந்து செயற்பாடாது பொது மக்களுக்கு வழிகாட்டாது இருந்த இருக்கின்ற கல்விமான்கள் புத்திஜீவிகள் என அழைக்கப்படுவபர்களும் இன்றைய சமூகம் நாடு உலகம் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கும் முரண்பாடுகளுக்கும் மோசமான நிலைமைகளுக்கும் பொறுப்பானவர்களே (responsible). மேற்குறிப்பிட்ட பொதுவான மனிதர்களின் வரலாற்று பொறுப்பின்மைகளினாhல் மட்டுமல்ல தனிநபர்களினது இயல்புகளும் இன்றைய நிலைமைகள உருவாவதற்கு காரணங்களாக இருக்கின்றன. எனது சிறுவயதில் எனது தகப்பனார் இருந்த கம்யூனிஸ் கட்சியின் அங்கத்தவர்களின் செயற்பாடுகளை கண்டபோதும் பதினாராம் வயதில் சூழ் நிலையால் கழக இயக்கத்தில் இணைந்து உணர்ச்சிபூர்வமாக செயற்பட்டபோதும் பின் சுய அறிவில் ஈரோஸில் இணைந்து உணர்வுபூர்வமாக செயற்பட்டபோதும் தொடர்ந்தும் செயற்படவேண்டும் என்ற ஊந்துதளினால் நவ சமசமாஜ கட்சியில் ஒருவருடம் இணைந்திருந்தபோதும் இறுதியாக உயிர்ப்பு சஞ்சிகையின் பின்னணியில் உருவான தமிழீழ மக்கள் கட்சியில் பணியாற்றியபோதும் மேலும் இவற்றைவிட நாடகக்குழக்களில் நடிகராகவும் சரிநிகர் பத்திரிகையில் பத்திரிகையாளராகவும் செயற்பட்ட காலங்களில் மட்டுமல்ல இன்று சுய மாற்றத்திற்கான தேடலிலும் செயற்பாட்டிலும் அலைந்து திரிந்துகொண்டிருக்கும் பொழுதும் அறிந்த கண்ட உணர்ந்த அனுபவித்த ஒரு உண்மை இன்றைய பல பிரச்சனைகளுக்கு காரணமும் அடிப்படையும் தனிநபர் சார்ந்த பிரச்சனைகளே என்பது வெள்ளிப்படையானது. இத் தனிநபர் பிரச்சனை என்னையும் உட்படுத்தியதே என்பதை புரிந்துகொள்வீர்கள். ஏனனில் ஒவ்வொரு தனிநபரும் மிகக் குழைந்தைத்தனமாகவும் சிறுபிள்ளைத்தனமாகவும் பக்குவமின்றி முதிர்ச்சியின்றி குறிப்பாக பிரக்ஞை இல்லாது செயற்பட்டதை செயற்படுவதை கடந்தகால அனுபவங்களின் மூலம் அறிய அனுபவிக்க புரிந்து உணரக் கூடியதாக இருந்தது என்றால் மிகையானதல்ல.

இதற்குச் சான்றாக வரலாற்று நிகழ்வுகளே ஆதராங்களாக இருக்கின்றன. ஊதாரணமாக இரஸிய புரட்சியின் பின்னான ஸ்டாலினின் பாத்திரமும் பின்பு நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற ஐனநாயக வழி பாதையிலும் அதன் தலைவர்கள் வகிக்கின்ற பாத்திரங்களும் சோவியத்தின் சோசலிஸ கம்யூனிஸ மக்கள் இன்று இன மதம் சார்ந்த பிரதேச (இரஸிய...) மக்கள்களாக மீண்டும் புரட்சிக்குப் முந்திய நிலைக்கு பின்நோக்கிச் சென்றுள்ளமையும் இதுபோன்று மேலும் சீனா, கீயுபா, கம்போடியா போன்ற கம்யூனிஸ நாடுகள் என்பனவும் நமக்கு புதிய பாடங்களை கற்பிக்கின்றன. இந் நாடுகளின் மக்கள்கள் கம்யூனிஸம் என்ற தங்கக் கூட்டுக்குள் அடைக்கப்பட்டு எந்த விதமான உரிமைகளும் அற்று வாழ்கின்றனர் என்பது யாவரும் அறிந்ததே. மேலும் இவ்வாறான ஒரு சமூகத்தை உருவாக்குவதற்காக அழிக்கப்பட்டவையும் இழக்கப்பட்டவையும் பலி கொடுக்கப்பட்டவையும் அதிகமானNது. ஏனனில் விளைவு எதிர்பார்த்ததற்கு மாறாக எதிர்மாறானதாகவே இருக்கின்றது. சமூக மாற்றங்களில் அக்கறை உள்ள புத்திஜீவீகள் ஆய்வாளர்கள் இங்கு நடந்தவற்றை நடப்பவற்றை ஆய்வு செய்யலாம். இது அவர்கள் பொறுப்பு (responsiblility). இதிலிருந்து பாடங்களை கற்கவேண்டியது மனிதர்களுக்கான சிறந்த வாழ்வை ஏற்படுத்த தொடர்ந்தும் செயற்படுபவர்களின் பொறுப்பு (responsiblility).

இன்று தமிழ் பேசும் மனிதர்கள் பல்வேறு பிரிவுகளாக பிரிந்து வாழ்கின்றனர். ஒரு சாரார் புலிகள் சார்பாகவும் இன்னுமொரு பிரிவினர் புலி எதிர்ப்பாளர்களாகவும் வேறு பிரிவினர் அரசாங்கம் மற்றும் புலி சார்பு அல்லது எதிர்ப்பாளர்களாக இருக்கின்றனர். இது தொடர்பாக சுவிஸ் ரவி அவர்கள் தேசம் வலைச் சஞ்சிகையிலும் வைகறை பத்திரிகையிலும ;எழுதிய கட்டுரை முக்கியமானது. அனைவரும் வாசிக்கவேண்டிய ஒரு கட்டுரை. பல எழுத்தாளர்கள் தமது விமர்சனக் கருத்துக்களை முன்வைக்கும் எழுத்துக்களும் பக்கச் சார்பாக மட்டுமல்லாமல் சிறுபிள்ளைத்தனமாகவும் இருக்கின்றது. உதாரணமாக அ.இரவி;, சோபா சக்தி, நட்சத்திரன் செவ்விந்தியன்......மற்றும் பலர், சிறந்த எழுத்தாற்றல்கள் உள்ளவர்கள். இவர்களது சிறந்த எழுத்துக்களின் மீது எனக்கு எப்பொழுதும் மதிப்பும் மரியாதையும் உண்டு. ஆனால் தாம் சார்ந்த அரசியலுக்காக சக மனிதர்கள் மீது சேரு வாரியிறைப்பதும் மூன்றாம் தரபாணியில் எழுதுவதும் அழகானதல்ல.இப்படி பலர் எழுதும் எழுத்துக்கள் மூன்றாம் தர எழுத்துக்களாகவே இருக்கின்றன. இவ்வாறான எழுத்தாளர்கள் இன்று பலர் இருக்கின்றனர். இந்த எழுத்தாளர்கள் தாம் எதிர்நோக்கும் விமர்சனங்களுக்கு பொறுப்பான பதிலளிப்பதற்குப் (response) மாறக எதிர்வினையாகவே (reaction) எழுதுகின்றனர். இது இருக்கின்ற பிரச்சனைகளை முரண்பாடுகளை தீர்ப்பதற்கு வழிகாண்பதற்குப் பதிலாக மேலும் பிரச்சனைகளையும் முரண்பாடுகளையும் அதிகரிக்கவே வழிசெய்கின்றனர். இதிலிருந்து இவர்களது நோக்கங்கள் என்ன என்று புரிகின்றன. இவர்கள் உண்மையிலையே பிரச்சனைகளை முரண்பாடுகளை தீர்க்க வேண்டும் என விரும்புவர்களாயின் பொறுப்புடன் (responsiblity) தமது எழுத்தாழுமைகளைப் பயன்படுத்துவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

ஏனது தகப்பனார் கரவை.ஏ.சி.கந்தசாமி அவர்கள் எனது பிறந்த நாளான மார்கழி 31ம் திகதி 94ம் ஆண்டு எனது அம்மா மற்றும் தங்கைகளின் முன்னிலையில் ஆயதபாணிகளால் கொல்லப்பட்டார். “யார் அப்பாவை சுட்டது” எனக் கேட்ட தங்கையின் மீது குண்டு ஒன்றையும் வீசியும் சென்றார் அந்த நபர். இக் கொலையை புலிகள் செய்தனர் என ஒரு சாரரும், வேறு சிலரோ இது உட்வீட்டுப் பிரச்சனை ஆகவே புளெட்டினரே செய்திருக்கவேண்டும் எனவும், இன்னும் சிலரோ “கரவை தனது தகப்பனார் போன்றவர்” எனக் கூறும் ஈபிடிபி டக்கிளசே செய்திருக்கவேண்டும் எனவும், ஒரு சிலர் இது அரசாங்கத்தின் வேலை என பல சாத்தியக் கூறுகளை முன்வைத்தனர். வைக்கின்றனர். தங்கையின் மீது குண்டு வீசியதால் அவருக்கு தெரிந்த நபராகவும் இருக்கலாம். எனது கேள்வி என்னவெனில் யார் செய்திருந்தாலும் இக் கொலை தொடர்பாக யாரிடம் புகார் செய்வது. யாரை யாருக்கு காட்டிக்கொடுப்பது. இது தொடர்பாக எது செய்தாலும் அது முரண்பாடாக அல்லவா இருக்கும். ஆகவே நமது பொறுப்பு (responsibility) இனிமேலும் இதுபோன்ற மனித படுகொலைகள் நடைபெறாது தடுப்பதற்கு செயற்படுவதே தவிற கொலை செய்தவர் மீது குற்றம கண்டுபிடிப்பதல்ல. ஆனால ;ஒரு கொலை நடைபெற்ற பின் யார் கொலை செய்தவர் எனத் தெரியாதபோதும் தம் அரசியல் சார்ந்து எதிர் அரசியலாளர்களை குற்றம் சாட்டி அவர்கள் மீது பழிபோடுவதோ அல்லது குறிப்பிட்ட அமைப்பை குழவை இயக்கத்தை அழிப்பதாக இலட்சியவேள்வி கொண்டு எழுவதோ நமது வழமையான அரசியல் நாடகமாக இருக்கின்றது. இது எந்தவகையிலும் இன்னுமொரு கொலையை நிறுத்தவோ அல்லது குறிப்பிட்ட இயக்கங்களை குழக்களை இல்லாது ஒழிக்கவோ உதவப்போவதில்லை. ஒரு கொலையை செய்தவருக்கு எப்படி தூக்குத் தண்டனை அழிப்பத தவறானதோ அதுபோன்றதே இப்பொழுது நடைபெறும் கொலைகள் தொடர்பாகவும நாம் நோக்கவேண்டும். ஆகவே, இவ்வாறன சந்தர்ப்பங்களில் மிகவும் பொறுப்புடன் ஒவ்வொருவரும் நடந்துகொள்ளவேண்டியது இன்றியமையாதது.

இறுதியாக இன்று காணப்படும் சமூக அரசியல் நிலைமையை மாற்றுவது நம் ஒவ்வொருவரதும் பொறுப்பு (responsiblity). இதை நிறைவேற்றுவதற்கு நாம் ஒன்றினைவதே இருக்கின்ற ஒரே வழி. இதற்கு நமது எழுத்துக்கள் விமர்சனங்கள் மிகவும் ஆரோக்கியமானதாகவும் பிரக்ஞையுடனும் எழுதப்படவேண்டியது மிக மிக அவசியமானது. குறிப்பாக நாம் அரசாங்கத்தை, அரசாங்க ஆதரவாளர்களை, புலிகளை, புலி எதிர்ப்பாளர்களை விமர்சிக்கும் பொழுது பொதுவான தளத்திலிருந்தே விமர்சிக்கின்றோம். இது அந்தந்த அமைப்புகளில் இருக்கும் சாதாரண அங்;கத்தவர்கைளப் பாதிப்பதுடன் தம் அமைப்புகளுடன் மேலும் ஆழமாக அவர்களை ஒன்றினைக்கவே வழிவகுக்கும். ஒவ்வொரு அமைப்பிலும் இணைந்து செயற்படுவதற்கு அவர்களுக்கான ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பல காரணங்கள் இருக்கும். ஆகவே நாம் மேற்குறிப்பிட்ட குழக்களை இயக்கங்களை அமைப்புகளை விமர்சிக்கும் பொழுது அதன் தலைமைகள் விமர்சிப்பதே சிறந்தது. ஏனனில் தலைமைகளே தவறான பாதையில் செல்வது மட்டுமல்லாமல் தம் அங்கத்தவர்களையும் தவறாக வழி நடத்துகின்றனர். இவ்வாறான பக்குவமான நடைமுறைகள் அவ்வவ் அமைப்புகளுடன் இணைந்திருக்கும் சாதாரண அங்கத்தவர்களை அதிலிருந்து விடுபட வைப்பதற்கும் பொதுவான ஒரு வேலைத்திட்டத்தில் இணைப்பதற்கும் உதவலாம். ஏனனில் இவர்கள்; மனித வாழ்க்கையை மேம்படுத்துவதற்காகவே இந்த இயக்கங்களுடன் குழக்கழுடன் இணைந்திருக்கலாம். ஆகவே, இன்றைய நமது அவசியமான தேவை, இலங்கை அரசு முன்னெடுக்கும் இந்த போரையும், புலிகளின் தலைமை வழிநாடாத்தும் ஆரொக்கியமற்ற ஆயத வழி விடுதலைப்போராட்டத்தையும், பிற தமிழ் சிங்கள ஆயதக்குழக்களின் செயற்பாடுகளையும் நிறுத்துவதற்கும் இலங்கையில அமைதியையும் சமாதானத்தையும் ஏற்படுத்துவதற்கும் ஒவ்வவொருவரும் உழைப்பதே. இதுவே மேற்கொண்டு நமது பிரச்சனைகளை முரண்பாடுகளை ஆரொக்கியமான வழிகளில் தீர்ப்பதற்கான வழிகளைக் காண உதவும்.

ஓரு விடயத்தை எனது கட்டுரைகளில் மீண்டும் மீண்டும் வலியுறுத்தவேண்டி உள்ளது. சுமூகம் என்ற ஒன்று இல்லை அல்லது இது கற்பனையில் கட்டமைக்கப்பட்ட ஒரு அமைப்பு. இருப்பினும் ஒரு சமூகம் எனக் கூறும் பொழுது தனி மனிதர்களின் சேர்ந்து உருhவன ஒரு குழு அடையாளமே பதிலாக கிடைக்கின்றது. ஆகவே சமூக மாற்றம் என்பது ஒவ்வொரு தனிமனிதர்களின் மாற்றம் (transform) மூலமே சாத்தியமானது. இத் தனிமனிதர்கள் மாறாது (transform) சமூகம் என்றழைக்கப்படுவது மாறுவதற்கு சாத்தியமே இல்லை. ஆகவே இன்றைய தேவை மனித மாற்றமும் (transform) வளர்ச்சியுமே (evolution through consciousness). ஏனனில் புதிய சமூக கட்டமைப்பை உருவாக்கவேண்டிய பொறுப்பு பக்குவப்பட்ட முதிர்ச்சியடைந்த பிரக்ஞையுடன் (conscious) வளர்கின்ற மாற்றத்தை (transforming) நோக்கிச் செல்கின்ற ஒவ்வொரு தனி மனிதருடையதும் பொறுப்பு என்றால் மிகையல்ல. மாறாக மந்தைக் கூட்டங்களின் பொறுப்பல்ல...

தனி மனித மாற்றமும் வளர்ச்சியும் சாத்தியமானதே. தியானம் என்ற விஞ்ஞான பயிற்சி முறைகளினாலான அனுபவத்தினால் ஆதி கால மனிதர்களால் உருவாக்கப்பட்டு தொடர்ச்சியாக மெருகூட்டப்பட்டு வளர்க்கப்பட்ட பயிற்சி முறைகளை பின்பற்றுவதன் மூலம் ஒவ்வொரு மனிதர்களும் மாறுவதற்கான வாய்ப்பு உள்ளது. இப் பயிற்சிகளினுடாக ஒவ்வொரு மனிதரும் தமது பிரக்ஞையை மேலும் மேலும் வளர்க்கலாம். ஏனனில் இன்றைய கால மனிதர்கள் தமது பிரச்சனைகளை முரண்பாடுகளை தீர்க்கமுடியாது இருப்பதற்கு தடையாக இருப்பது அவர்களது பிரக்ஞையின்மையே (unawareness). பிரக்ஞையை (conscious) வளர்ப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட தியான முறைகளை ஒவ்வொரு மதங்களும் உள்வாங்கி அவற்றை மனித வளர்ச்சிக்கு அல்லாது ஆன்மீக பாதைக்கு மட்டுமே உரியது என மட்டுப்படுத்தி மதம் சார்ந்த பயிற்சியாக மாற்றிவந்துள்ளனர். அதுவும் மனிதர்களின் இறுதிக்காலங்களில் மட்டுமே இவற்றை பயிற்சி செய்ய வேண்டும் எனவும் மட்டுப்படுத்தியுள்ளனர். இந்த கருத்தாதிக்கம் மனிதர்களிடம் ஆழமாக பதிந்துள்ளது. அகவே தியானம் தொடர்பாக இன்று எழுதி உரையாடுவது என்பது ஆன்மீகம் சார்ந்து மதம் சார்ந்தே தவறாகப் பார்க்கப்படுகின்றது. இது மட்டுமின்றி இன்று பல்வேறு மதவாதிகளும் சாமியார்களும் மீண்டும் தியானத்தை தம் மதங்கள் சார்ந்து முன்னெடுத்து அதன் தார்ப்பரியத்தை சிதறடிக்கின்றனர். ஆகவே இக் கருத்தாதிக்கங்களிலிருந்து தம்மை முறித்துக்கொண்டு ஒவ்வnhரு மனிதரும் தாம் மாறுவதற்கும் (transform) பிரக்ஞையில் வளர்ச்சியடைவதற்கும் (evolution through consciousness). மதம் சாராத தியான வழிமுறைகளைப் பின்பற்றவேண்டியது இன்றியமையாததாகும். இதுவே நாம் எதிர்நோக்கும் சமூக மனித பிரச்சனைகளுக்கும் முரண்பாடுகளுக்கும் எதிர்வினையாற்றாது (reaction) பொறுப்பான (response) முறையில் செயற்பட (act) வழியமைக்கும்.

நான் சிறந்த எழுத்தாளரோ அல்லது பேச்சளரோ இல்லை. ஆகவே என்னால் அழகு தமிழில் எழுதி உணர்ச்சித் தமிழில் உரக்க அழகாக பேசி மனிதர்களை நான் முன்னெடுக்கும் செயற்பாடுகளுக்கு அழைக்கவோ ஒன்றினைக்கவோ என்னால் முடியாது என்பது நான் அறிந்தது. இருப்பினும் எனது தனி நபர் பொறுப்பு (responsiblity) என்பது எனக்கும் உள்ளது என்பதனை பிரக்ஞைபூர்வமாக அறிந்து உணர்ந்தனால் என்னால் முடிந்தளவு எனது ஆற்றல்களுக்கு உட்பட்டு எழுதியும் செயற்பட்டும் வருகின்றேன். எனது எழுத்துக்களை அறிந்த நீங்கள் எனது செயற்பாடுகளை அறி வாய்ப்பு இருக்காது. ஏனனில் புகழ்பெற்றவர்களின் செயற்பாடுகளையும் குறிப்பிட்ட பல மனிதர்கள் குழவாக இணைந்து பங்கு கொள்ளும் நிகழ்வுகளையுமே ஊடகங்கள் முக்கியப்படுத்தி பிரசுரிக்கின்றன. தனிநபர்களின் சில செயற்பாடுகள் தனி நபர்; திருப்தியுடன் மட்டும் நிறைவு பெறுகின்றது என்பதே நாம் பொதுவாக அறிந்தது. ஆனால் தனிநபர் ஆரோக்கியமாகவும் பிரக்ஞையுடனும் முன்னெடுக்கும் செயற்பாடானது அதன் சக்தியானது அலைவடிவங்களாக மனிதர்கள் அறியாமலே ஒவ்வொரு மனிதர்களுக்குள்ளும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது என்பது மெய்ஃவிஞ்ஞானிகளின் அனுபவம். இதில் நம்பிக்கை கொண்டு கடந்த மே மாதம் 20ம் 22ம் 25ம் திகதிகளின் டொரொன்டோவில் உள்ள இலங்கை தூதுவராலயத்திற்கு முன்பும் ஒன்டாறியோ பாராளுமன்றத்திற்கு முன்பும் உலகத் தமிழர் காரியாலயத்திற்கு முன்பும் சில மணித்தியாலங்கள் அடையாள உண்ணாவிரதத்தையும் தியானத்தையும் மேற்கொண்டேன். மேலும் இதை பல மனிதர்களுடன் சேர்ந்து பின்வரும் இடங்களான கனடா ஒட்டோவாவிலுள்ள இலங்கை தூதவராலயத்திற்கு முன்னாலும் கனடிய பாராளுமன்றத்திற்கு முன்னாலும் இபோன்று பிற நாடுகளிலும் தொடர்ச்சியாக முன்னெடுப்பது இலங்கையில் இன்று நடைபெறும் போரை நிறுத்தி அமைதியையும் சமாதானத்தையும் உருhவக்கி சமூக இன முரண்பாடுகளுக்கு தீர்வைக் காண ஆரோக்கியமான வழிகளைக் கண்டுபிடிக்கலாம்; என நம்புகின்றேன்.
இதைத் தொடர்ச்சியான நடைமுறைப்படுத்துவதே குறிப்பான தாக்கத்தை ஏற்படுத்தும். ஆகக்குறைந்தது ஒவ்வவொரு வார இறுதி நாட்டிகளிலும் முடிந்தால் ஒவ்வொரு நாளும் நாம் இப் பயணத்தை முன்னெடுக்கலாம். புலம் பெயர்ந்து வாழும் பலர் வீடுகளில் ஒன்றும் செய்யர்து இருப்பவர்களும் வேலையற்று இருப்பவர்களும் மற்றும் அமைதியிலும் சமாதானத்திலும் அக்கறை உள்ளவர்களும் இவ்வாறான செயற்பாட்டுப் பயணங்களில் பொறுப்புணர்வுடன் பங்கு கொள்ளலாம். இது குழக்கள் அமைப்புகளுக்கு அப்பாற்பட்டு தனிநபர் சுதந்திரமும் பொறுப்புணர்வும் சார்ந்த விடயம்.

ஒவ்வொரு மனிரும் சுதந்திரமாகவும் பொறுப்புடனும் (responsibility) பிரக்ஞையுடனும் (awareness) செயற்படுமிடத்து ஒவ்வொரு பிற மனிதருடைய சுய நிர்ணைய உரிமையும் அங்கிகரிப்பதும் மதிப்பளிப்பதும் சாதாரண வாழ்;வு முறையாக மாறும். இவ்வாறான ஒரு நிலைப்பாடு பக்குவத்தன்மை முதிர்ச்சி கொண்ட மனிதர்களே பிற மனித குழக்களின் சமூகங்களின் தேசங்களின் நாடுகளின் சுயநிர்ணைய உரிமையையும் அங்கிகரிப்பதற்கும் அங்கிகரிக்கப்படுவதற்கும் மதிப்பதற்கும் மதிக்கப்படுவதங்கும் தகுதியுடையவர்கள் ஆகுகின்றனர்.
நன்றிதொடர்புகளுக்கு awareness@rogers.comawakeningawareness.org

No comments: