Thursday, July 28, 2011

தியானம்! நான் யார்? என்பதை அறிவதற்கு…

தியானம் என்பது என்ன?
இருக்கும் இடத்தில் இருப்பது.
நாம் நாமாக இருப்பது.
முழுமையாக இருப்பது.
மனவோட்டங்களை எண்ணங்களைக் கவனிப்பது.
உணர்வுகளை உணர்ச்சிகளை கவனிப்பது.
மனதைச் சுத்தப்படுத்துவது.
இதன்மூலம் மனதிற்கு அப்பால் செல்வது.
ஓவ்வnhரு கணமும் பிரக்ஞையாக இருப்பது.
இவ்வாறு இருக்க முடியுமானால் மேற்குறிப்பிட்டவை தாமாகவே நடைபெறும்.
ஆனால் யதார்த்தத்தில்
நாம் முழுநேரமும் பிரக்ஞையாக இல்;லை.
இதுவே நாம் அறியாதது.
தியானம் என்பது ஒன்றைக் குறித்து கவனிப்பதோ (concentration)
சிந்திப்பதோ (thinking) ஒன்றைப்பற்றி ஆராய்வதோ (contemplation)  அல்ல.
ஏனனில் இவற்றில் எல்லாம் மனம் தொடர்பு கொள்கிறது.
தியானம் என்பது மனம் கடந்து செல்லவது.
மனதுக்கு அப்பால் செல்வது ஆகும்.
தியானம்!
நம்மை அமைதியான நிலைக்கு அழைத்துச்செல்லாது.
அமைதி நம்மில் நிலவுவதற்கான
ஒரு சூழலை நிலைமையை நம்மிடம் உருவாக்கும்.
எப்பொழுதெல்லாம் அமைதி நிலவுகின்றதோ
அப்பொழுதெல்லாம் நம் வாழ்க்கையில் சிரிப்பு நிகழ்கின்றது.
கவலை கொள்ளமாட்டோம். மன அழுத்தம் வராது.
உலகத்திலிருந்து தப்பித்து ஒடமாட்டோம்.
இந்த உலகத்திலையே இருப்போம்.
ஆனால் நடைபெறும் அனைத்தையும்
ஒரு விளையாட்டாக எடுத்துக் கொள்வோம்.
ஒரு அழாகான விளையாட்டாக ...
மிகப்பெரிய ஒரு நாடகமாக எடுத்துக்கொண்டு
ஆடிப்பாடி மகிழ்வோம்.
விளையாட்டுத்தன்மை உள்ளவர்களாக வாழ்வோம்.
நம்முள்ளே அமைதி நிலைமையை உருவாக்குவதற்கான தியான வழிமுறைகள் பல உள்ளன. குறிப்பாக 118 அடிப்படை வழிமுறைகள் உள்ளன. இவற்றை அடிப்படையாகக் கொண்டு இக் கால மனிதர்களுக்கு ஏற்றவகையில் ஓசோ பல தியான முறைகளை உருவாக்கி உள்ளார். இதில் மிகவும் பிரபல்யமானது. டைனமிக் (dynamic meditation) தியானமுறை. இது இதுவரை காலமும் பின்பற்றப்பட்ட மரபு நிலை தியான முறைகளிலிருந்து வித்தியாசமானது. நமக்குள் இருக்கும் சக்தியை வெளிக் கொண்டுவரச்  செய்வது.
டைனமைட், கற்களை வெடித்து சிதறடிப்பதுபோல்,
டைனமிக் தியானம் ,
நம் கடந்த காலத்தை
நாம் அடக்கிய உணர்ச்சிகளை
நாம் அடக்கிய உணர்வுகளை
வெடிக்கச் செய்து
படைப்புச் சக்தியாக மாற்றுகின்றது.
நமது வாழ்க்கை எந்தநேரமும் அவசரம் பயம் சந்தேகம் என பல அமைதியற்ற தன்மைகளைக் கொண்டது. இவற்றை எவ்வாறு அமைதியாக்குவது? கடந்த காலத்தில் நாம் விரும்பியது ஆனால் பண்பாடு கலாசாரம் நாகரிகம் கருதி நாம் தவிர்த்தது அடக்கியது நம்மை விட்டுச் சென்று இருக்காது நமக்கே தெரியாமல் நமக்குள் இன்றும் வாழ்கின்றது. எந்த நேரமும் வெளியில் எட்டிப்பார்த்து நம்மை அலைக்கழிக்கும்.
இதை எப்படி முடிவுக்கு கொண்டுவருவது
முதலில் நம் உடலில் இருந்து ஆரம்பிக்கவேண்டும்.
உடலை அமைதியாக இயல்பாக வைத்திருக்கப் பழகுவது.
இதன் பின் மனதை அமைதியாக்குவது.
நம் மிகப்பெரிய சவால் நம்முடன் இருந்துகொண்டே
நம்மைக் கொல்லும் மனத்தை அமைதியாக்குவது தான்.
உடலைப் போல மனதை அவ்வளவு இலகுவாக அமைதியாக்க முடியாது.
ஆனால் உடலை அமைதியாகக்கப் பழக்கினோம் என்றால்
மனதையும் வழிநடத்தலாம்.
மனம் அமைதி ஆக இருக்குமாயின்
அப்பொழுது இதயத்திற்குச் செல்லலாம்.
நம் உணர்வுகள் உணர்ச்சிகள் மனதை விட மேலும் சிக்கலானவை.
ஆனால் நம்பிக்கையுடன் இதயத்தை அனுகினால்
இதையும் அமைதியாக்குவது சாத்தியம்.
இதன்பின் நம் மையத்திற்கு
அதாவது உடல் மனம் இதயம் என்பவற்றுக்கு அப்பால்
நம் இருத்தலின் மையத்திற்கு செல்லலாம்.
இங்கு அமைதியாக இருக்கலாம்.
இந்நிலையில் நம்மில் ஆனந்தம் பிறக்கும்
பேரின்பம் கொள்வோம். என்கின்றனர் அனுபவித்த பலர்.
முழு இயற்கையும் நடனமாடுகின்றது மனிதரைத் தவிர.
மனிதர்; இயற்கையை புரிந்துகொண்டால் கடவுளுக்கு மேலேயும் உயரலாம். புரிந்துகொள்ளவில்லை ஏனில் மிருக நிலைக்கு கீழேயும் விழலாம்.
மனிதருக்கு மட்டுமே சாத்தியமான சிறந்த ஆற்றல் இது.
ஓவ்வொரு நாளும் ஒரு நேரத்தை ஓதுக்குங்கள்.
மிகவும் வசதியாக கஸ்டம் எதும் இல்லாமல் இருக்குமாறு உடலை சரிசெய்யுங்கள். கண்ணை மூடியவாறே மூக்கின் நூனியைக் கவனியுங்கள்.
மூச்சு உள்ளே வருவதையும் வெளியே செல்வதையும் கவனியுங்கள்.
இத் தியான முறை நம்மிடம் அமைதியை உருவாக்கின்றது.
இம்முறை மூலமே கௌதம சித்தாத்தர் என்ற இளவரசர் புத்தர் நிலையை அடைந்தார்.
புத்தர் நிலை என்பது தன்னை கண்ட நிலை.
உண்மையை உணர்ந்த நிலை அதாவது ஞானம் அடைந்த நிலை!
அனைத்தும் அறிந்த நிலை.
எதையும் துறக்காமல்
உலகத்தை விட்டு காட்டுக்கு ஓடாமல்
நாளாந்த வாழ்க்கையில் ஈடுபட்டுக்கொண்டே
நாம் ஒவ்வொருவரும் புத்தர் என்பதை அறிய
தினந்தோறும் தியானம் செய்வோம்;.
ஒருவரின் மனம் அமைதியாக இல்லை எனில் 
இமய மலைக்குச் சென்றாலும் அமைதியாக இருக்காது.
ஒருவரின் மனம் சந்தையிலும் அமைதியாக இருக்குமாயின்,
பிரக்ஞையாக இருப்பாராயின் அவர் தியான நிலையில் இருக்கின்றார்.
இவருக்கு ஞானம், பேரின்பம் சந்தையிலும் கிடைக்கும்.
சந்தையிலும் அதாவது நம் சாதராரண நாளாந்த வாழ்க்கையிலும் அமைதியாகவும் பிரக்ஞையாகவும் ஆனந்தமாகவும் வாழ்வதற்கே ஓசோ நமக்கு வழிகாட்டுகின்றார். ஓவ்வொரு தியான முறைகளும் இந் நிலையை நோக்கி நம்மை வழிநடத்துகின்றன.
தியான முறைகள்
படகுகள் போல
ஆற்றைக் கடப்பதற்கு மட்டுமே
தியான நிலையை அடைவதற்கான
பேரின்பத்தை அனுபவிப்பதற்கான
ஒரு ஊடகம்.
ஒரு பாதை.
மானுட விடுதலைக்கும் உலக அமைதிக்கும் ஆனந்தமான வாழ்க்கைக்கும்
இவர் வழிகாட்டும் பாதை இது.
தேடுங்கள்! உங்கள் உள்ளே! தியானப்பயிற்சியே ஒசோவின் வழிமுறை.
ஓசோவின் புத்தகங்கள் ஒரு வழிகாட்டி மட்டுமே. பயணிக்கவேண்டியது நாம்.

Monday, May 16, 2011

ஓசோ தியானமுறைகள்: ஒரு ஆய்விற்கான முன்மொழிதல்

ஓசோ தியானமுறைகள்: ஒரு ஆய்விற்கான முன்மொழிதல்

 ஏதிர்வரும் பத்தாண்டுகளில் உலகத்தில் வாழும் மனிதர்கள் பலவிதமான உளவியல் மற்றும் மனநோய்களால் பாதிக்கப்படப்போவதாகவும், ஆகவே இது உலகத்தின் முக்கியமான ஒரு பிரச்சனையாக இருக்கப்போவதாகவும் ஆய்வுகள் எதிர்வு கூறுகின்றன. ( கத்தியா ருபியா, 2009). ஏற்கனவே பல நாடுகளில் புலம் பெயர்க்கப்பட்டு வாழ்கின்ற தமிழ் பேசுகின்ற நாம் நமது நாளாந்த வாழ்வின் பலவிதமான கஸ்டங்களால் பல்வேறுவிதமான மன அழுத்தங்களுக்கு உட்பட்டிருக்கின்றோம். இதைவிட இலங்கையில் வாழ்கின்ற தமிழ் பேசும் மனிதர்கள் கடந்தகால போரினாலும் அதில் ஏற்பட்ட தோல்வியாலும் மற்றும் சுனாமி போன்ற இயற்கை அனர்த்தங்களாலும் அதிகமான உளவியல் மற்றும் மனநோய்களுக்கு உள்ளாக்கப்பட்டு மன வடுக்களையும் அழுத்தங்களையும் எதிர்நோக்குகின்றனர். மேலும் தமிழ் பேசுகின்ற இலங்கை வாழ் மலையக மனிதர்கள், தமிழக மனிதர்கள், அல்லது பிற நாடுகளில் வாழ்கின்றன தமிழ் பேசுகின்ற மனிதர்கள்;  மட்டுமல்ல உலகத்தில் உள்ள அனைத்து மொழி பேசுகின்ற மனிதர்களும் பல்வேறு காரணங்களால் உளவியல் மற்றும் மன நோயால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இது எல்லா மட்டங்களிலும் சூழல்களிலும் வாழ்கின்ற மனிதர்களது நாளாந்த வாழ்வை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கு மட்டுமல்ல சாதாரணமாக வாழ்வதற்கு கூட தடையாக இருக்கின்றது. இவ்வாறான உளவியல் மற்றும் மன நோய்களைத் தீர்ப்பதற்கு ஜ.நாவின் மனித நலத்திற்கான பிரிவுகளும் மற்றும் பல நாடுகளிலுள்ள உடல் நல அமைச்சுகளும் சமூக நிறுவனங்களும் அமைப்புகளும் அக்கறையாக இருக்கின்றன. இதற்காக இவர்கள் ஆகக் குறைந்தது ஆறு வகையான மன அழுத்தத்தை குறைக்கின்ற இயற்கையான பக்கவளைவுகளற்ற ஆரோக்கியமான முறைகளை சிபார்சு செய்கின்றனர். இவற்றில் தியானமுறைகள், முச்சுப் பயிற்சிகள்  மற்றும் யோகாசனப் பயிற்சிகள் என்பன சிலவாகும் ( கில்லானி 2001).
மனிதர்களது ஆன்மா, மனம், உள்ளம், உடல் என்பவற்றை ஒன்றினைத்து அதன் முழுமையான செயற்திறனை அதிகரிக்கவும் மறுபுறம் மன அழுத்தத்தை குறைத்து ஆறுதலை ஏற்படுத்தவும் மிகவும் அதிகமாக ஊக்கிவிக்கப்படுகின்ற ஒருமுறை தியானம் ஆகும் (2001, 2009). தியான முறைகளில் பலவிதமான வேறுபாடுகள் உள்ளன. அதில் உடற் செயற்பாடுகளையும் மற்றும் உணர்வுகள் உணர்ச்சிகளை வெளிப்படுத்துகின்ற முறைகளையும் அல்லது அமைதியான முறைகளையும் அடிப்படையாகக் கொண்ட பல வழிமுறைகள் உள்ளன. இதில் அமைதியான தியான முறைகளான மனதை முழுமையாகக் கவனித்தல் (mindfullness) மற்றும் டிஎம் (TM) எனப்படுகின்ற தியான முறைகளே அதிகமாக அறியப்பட்டவையாக இருக்கின்றன. இம்முறைகளே புலமைசார் கல்வித் துறையிலும் அதிகமான பரிசோதனைக்கு பயன்படுத்தப்பட்டு விஞ்ஞர்ன ரீதியான நேர்மறை முடிவுகளை முன்வைத்துள்ளன. இவை தியானம் தொடர்பான முக்கியத்துவத்தையும் அதன் பயன்களையும் ஆதாரத்துடன் முன்வைத்துள்ளன. ஆனால் ஓசோவின் தியான முறையானது புலமைசார் தூறைகளில் அதிகமாகப் பயன்படுத்தப்படவில்லை. இது ஒரு முக்கியமான குறைபாடாகவே புலமைசார் துறையில் இருக்கின்றது. ஆகவே அமைதியாக இருந்து தியானம் செய்வதற்கு முதல் ஓசோவின் தியானமுறையின் படி உடல் அசைவுகள், உணர்ச்சிகளை வெளிப்படுத்தல் மற்றும் மனதை சுத்தப்படுத்தல் என்பவை முக்கியமானதும் அவசியமானதுமான பகுதிகள் என்பதை ஆய்வினடிப்படையில் வலியுறுத்துவதே இக் கட்டுரையின் நோக்கமாகும். மேலும் ஓசோ தியானம் தொடர்பான புலமைசார் ஆய்வுகளை அதிகம் மேற்கொள்வதும் அவசியமானதும் பயனுள்ளது என்பதை வலியுறுத்துவதுடன் அதற்கான ஒரு முன்மொழிவையும் முன்வைக்கின்றது.
ஆண்மையில் யோர்க் பல்கலைக்கழகத்தின் இரு பேராசிரியார்கள் நடாத்திய பயிற்சிகள் இரண்டில் பங்குபற்றியிருந்தேன். இவர்கள் மனிதர்களின் உளவியலிலும் மனநிலையிலும் பிரக்ஞையிலும் மாற்றத்தையும் வளர்ச்சியையும் ஏற்படுத்தக்கூடிய முக்கியமான ஆய்வுகளை முன்னெடுப்பவர்கள். பேராசிரியர் லெஸ்லி கிரின் (L.Greenberg) அவர்கள் மனிதர்கள் தமது உணர்ச்சிகளை வெளியீடுவது அவர்களது உடல் உள மற்றும் மன ஆரோக்கியத்திற்கும் மிக முக்கியமானது எனவும் ஆகவே உளவியல் சிகிச்சை முறைகளில் இது முக்கியமான ஒரு பகுதியாக இருக்கவேண்டும் எனவும் வலியுறுத்துகின்றார். இது தொடர்பாக இவர் மேற்கொண்ட ஆய்வுகள் (Emotion focused therapy) உளவியல் உலகிற்கு புதிய வரவாக இருப்பதுடன்; மிகவும் பிரபல்யம் பெற்றுவருகின்ற ஒன்றுமாகும். மறுபுறம் போராசரியர் போல் ( Rivito Paul) அவர்கள் ஏற்கனவே மேற்குலகில் பிரபல்யமான சி.பி.டி (CBT) எனப்படும் பொக்னிட்டுவ் பிகேவியர் தேரப்பியல் (cognitive behavior therapy) தியானத்தின் முக்கியத்துவம் தொடர்பாக தனது ஆய்வுகளை பரிசோதனை ரீதியாக முன்னெடுத்து வருபவர். இந்த முறை உளவியல் தொடர்பான சிகிச்சையில் கடந்த சில பத்தாண்டுகளாக பிரபல்யமானது. ஆனால் இன்னும் யோகா பயிற்சிகள் போன்றளவிற்கு தியானம் என்பது பொது மனிதர்களிடம் பிரபல்யமாகவில்லை எனலாம். இவர்களது ஆய்வுகள் தொடர்பான விரிவான பார்வையை விரைவில் முன்வைக்கின்றேன்.  இங்கு இவர்களது முறைகளில் உள்ள குறைபாட்டை மட்டும் இப்பொழுது கவனத்தில ;கொள்கின்றேன். இருவரும் தங்களது முறைகளுக்கு கொடுக்கின்ற முக்கியத்துவமளவு மற்றவரது முறைக்கு முக்கியத்துவத்தை வழங்காது புறக்கணிக்கின்றனர் அல்லது கவனிக்காமல் விடுகின்றனர். இது இவர்களது ஆய்வுகளைப்; பொறுத்தவரை முக்கியமான ஒரு குறைபாடு என குறிப்பிடலாம்.
பேராசிரியர் கீரினது உணர்சிகளை வெளிப்படுத்துவது தொடர்பான ஆய்வு இன்றைய சுழலில் மிகவும் முக்கியமானது என்றால் மிகையல்ல. ஏனனில் நமது கலாசராத்தாலும் மற்றும் அதிகார மயப்பட்ட சூழலால் வெளிப்படுத்த முடியாது அடக்கிய அல்லது அடக்கப்பட்ட நமது உணர்ச்சிகளே, ஒருவரது மன அழுத்தம் அல்லது மனச் சோர்வுக்கு காரணமாக இருக்கின்றன. ஆகவே இவ்வாறன உணர்சிகளை வெளிப்படுத்தும் உளவியல் சிகிச்சை முறை, ஒருவர் தான் அடக்கிய அல்லது வெளிப்படுத்த முடியாது போன உணர்வுகளை உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதற்கான சுழலை, சந்தர்ப்பத்தை அவருக்கு வழங்குகின்றது. ஆனால் ஒருவர் தனது உணர்ச்சிகளை இவ்வாறு வெளியேற்றிய பின் உருவாகின்ற மனநிலையில் தொடர்ந்தும் இருப்பதற்கு அவருக்கு ஒரு ஊன்றுகோல் தேவைப்படுகின்றது. இந்த ஊன்று கோலானது இங்கு தியானம் எனக் கொள்ளலாம். ஆனால் பேராசிரியர் கீரின் தனது சிகித்சை முறையில் தியானத்தை கைவிட்டு விட்டார்.
மறுபுறம் தியானத்தை முக்கியத்துப்படுத்தும் பேராசிரியர் போல், ஒருவர் தியானம் செய்வதற்கு தடையாக இருக்கின்ற அதாவது அவர் சஞ்சலப்படுகின்ற உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் வழங்காது விடுகின்றார். இது ஒருவர் அமைதியாக இருந்து தியானம் செய்வதற்கு தடையாக இருக்கின்றது. ஏனனில் இவ்வாறன உணர்ச்சிகள் கொந்தளிக்கும் நிலையானது ஒருவரை அமைதியாக இருக்கவிடாது. தியானம் எந்தளவிற்கு முக்கியமோ அந்தளவிற்கு அதற்கான மனநிலையை உருவாக்குவதும் முக்கியமானது. உண்மையிலையே இந்த இரண்டு ஆய்வுகளும் முக்கியமானவை. ஆனால் அவை பிரிந்து இருப்பதனால் அதன் முழுமையான பயனை பெறமுடியாமல் இருக்கின்றது. இவை ஒன்றினையும் பொழுது முக்கியமான ஒரு திருப்புமுனையை அவர்களது ஆய்வில் ஏற்படுத்துவதுடன் மிகப் பெரும் பயனை அனைவருக்கும் தரக்கூடியது எனலாம். இவ்வாறன ஒரு இணைவையே ஓசோ பல ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கி அதை பயன்பாட்டிலும் விட்டுள்ளார். ஆனால் துரதிர்ஸ்டவசமாக அது புலமைசார் துறையில் ஆய்வுக்கு உட்படுத்தப்படவில்லை.
புலமைசார் துறையில் ஓசோவின் தியான முறைகள் தொடர்பான ஆய்வுக் கட்டுரைகள் இரண்டு மட்டுமே காணக்கூடியதாக இருந்தது. ஒன்று அந்தோனி டி அந்திரேயாவின் (A. D’Andrea,  2007) ஓசோவின் புனே தியான இடம்  தொடர்பான சூழல்சார்;ந்த வரலாற்றுரீதியான ஆய்வுக் கட்டுரை. மற்றது அவனி வையாஸின் (A.Vyas,  2007) காலநிதிப் பட்டத்திற்காக செய்யப்பட்ட பரிசோதனை அடிப்படையிலான ;ஆய்வுக் கட்டுரை. இவர்களது கூற்றின்படி ரஜனிஸ் என அறியப்பட்ட இந்திய ஞானியான ஓசோ என்பவர் கீழக்கினதும் மேற்கினதும் தத்துவங்களையும் மற்றும் இயற்கை மருத்துவ முறைகளையும் உள்ளடக்கி ஒன்றினைத்து புதிய தியான முறையை உருவாக்கியவர் என்கின்றனர். இவ்வாறு புதிய முறையை உருவாக்குவதற்கான் காரணம், வழமையான பராம்பரிய அமைதியான தியான முறைகள் இக் காலத்தில் வாழ்கின்ற மனிதர்களுக்கு பெரியளவில் உதவுகின்றது இல்லை என்கின்றார் ஓசோ (2003, 2010). ஏனனில் இவ்வாறான பாரம்பரிய தியானமுறைகளை குறிப்பாக புதியவர்கள் பின்பற்றுவது மிகவும் கஸ்டமானது என்கின்றார். இருப்பினும் இவ்வாறான பாரம்பரிய தியான முறைகள் நீண்ட காலமாக பின்பற்றபட்டடும் வந்துள்ளதுடன் அந்தக் கால மனிதர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்துள்ளது என்கின்றார்.   இதன் காரணமாக இக் கால மக்களும் அதை அப்படியே பின்பற்றுவதால் பயனடைய முடியுமா என்ற கேள்வியையும் எழுப்புகின்றார்.
குறிப்பாக புத்த்ரின் வருகைக்குப் பின்பு இந்த அமைதியான தியான முறைகள் உதாரணமாக விபாசனா போன்றவை பிரபல்யமாகியது என்கின்றார் ஓசோ. இதன் பின் கீழைத்தேய நாடுகளில் இது தொடர்ந்தும் பிரபல்யமாக இருந்ததுடன் பின்பற்றப்பட்டும் வந்துள்ளது என்கின்றார். ஆனால் மேற்கில் கடந்த சில பத்தாண்டு காலமாகவே இவ்வாறான தியான முறைகளுக்கு  முக்கியமான கவனம் வழங்கப்பட்டு வருவதுடன் புலமைசார் கல்வித்துறையிலும் இதன் உண்மையான பயன்களை அறிவதற்கான பரிசோதனை முயற்சிகளும் நடைபெற்றுவருகின்றன என்பது மகிழ்வான விடயமே. இந்தப் பாரம்பரிய தியான முறைகளிலும் பல்வேறு வகைகள் இருந்தபோதும் அவை பொதுவாக மனிதர்களது மன அழுத்தத்தை குறைத்து அவர்களுக்கு ஆறுதலை வழங்குவதற்கும் மற்றும் நீண்ட கால குறுகிய கால நன்மைகளும் பெறக்கூடியதாகவும் உள்ளன (Weiss, Nordlie & Siegel, 2005).
இவ்வாறான பாரம்பரிய முறைகளில் குறிப்பாக விபாசனா, சென், முழுமனத் தியானம் மற்றும் டி.எம் ஆகிய முறைகளே இன்று மேற்கில் அதிகமானவர்களால் பின்பற்றப்பட்டு வருவதுடன் ஆய்வுகளுக்கும் பயன்படுத்தப்படுன்றன (Rubia, 2009; Smith, 2001; Shao, 2009). இவ்வாறன முறைகள் வழமையாக அமைதியாக இருந்து கண்களை மூடி தமது மூச்சையும் எண்ணங்களையும் எந்தவிதமான மதிப்பீடுகளுமில்லாது கவனிப்பதாகும். இந்த பாரம்பரிய முறையானது நமது மனச் சோர்வு மற்றும் மன அழுத்தங்களுக்கான ஆரம்ப அறிகுறிகளை அறிவதற்கு உதவி செய்கின்றது. மேலும் பிரக்ஞையுடன் ;மூச்சைக் கவனிப்பது என்பது நமது எண்ணங்களின் அதாவது மனதினதும் மற்றும் உணர்ச்சிகளினதும் நம் மீதான ஆதிக்கத்தை குறைக்கவும் உதவி செய்கின்றது என்கின்றனர் (Toneatto & Nguyen, 2007). இது தொடர்பான எனது விரிவான “தியானம் – ஒரு மேற்குலக விஞ்(ஞான)களின் பார்வையில்…” கட்டுரையைப் பார்க்கவும்.
ஓசோ பாரம்பரிய முறைகள் மீது விமர்சனம் உள்ளவராக இருந்துள்ளார். ஏனனில் அவை மிகவும் சிராக ஒழுங்கமைகப்பட்டமையால் நம் மீதான கடந்தகால கட்டுப்பாடுகளையும் ஒழுங்கமைக்கப்பட்ட நமது மனதையும் குறிப்பிடத்தக்களவில் மாற்றாது என்கின்றார் ஓசோ.  மேலும் இக் கால மனிதர்கள் தமது உடலுடனும் செய்கைகளுடனும் எந்தவிதமான பிரக்ஞையோ தொடர்பு அற்றவர்களாக இருப்பதுடன் இயந்திரத்தனமான விரைவான வாழ்கையை வாழ்கின்றனர். மேலும் இவர்கள் தமது சமூக கலாசார ஆதிக்கத்தால் தமது உணர்வுகள் மற்றும் உணர்ச்சிகளை தொடர்ச்சியாக அடக்கியே வாழ்ந்து வருகின்றனர். இது மட்டுமின்றி இக் கால மனிதர்களின் மனம் தேவைக்கு அதிகமான அறிவையும் கொண்டுள்ளது. இவ்வாறன பிரச்சனைகளினால் மனிதர்கள் ஒரு விதமான உடல் உள மற்றும் மன பதட்டத்துடன் வாழ்வதால் அவர்களால் ஒரிடத்தில் அமைதியாகவும் ஆறுதலாகவும் இருந்து பிரக்ஞையுடன் தமது மூச்சையும் எண்ணங்களையும் கவனிப்பதற்கு கஸ்டமாக இருக்கின்றது என்கின்றார் ஓசோ (2003, 2010). இதுபோன்று சென் (Zen) மற்றும் காபாட் சின்னால் (Kabat- Zinn ) உருவாக்கி மேற்கில் பிரபல்யமான முழுமையான மனத் தியானமும் (Mindfulness-Based Stress Reduction (MBSR) தியானப் பயிறச்சிக்கு புதிதாக வருகின்றவர்களுக்கு புரிந்துகொள்வதற்கும் பயிற்சி செய்வதற்கும் கஸ்டமாகவே இருக்கின்றன எனக் கூறப்படுகின்றது (Smith, 2001). மேலும் தியானம் செய்வதற்காக ஒருவர் இருக்கின்ற பொழுது வழமையை விட அதிகமான எண்ணங்கள் அவர்கள் மனதில் வந்து குவிகின்றன. இது அவர்கள் அமைதியாக இருப்பதற்கான நிலையை குழப்புவதுடன் எண்ணங்கள் அற்ற ஒரு மனநிலையை; அடைய முடியாதவர்களாகவும் இருக்கின்றனர். இவ்வாறான காரணங்;களே புதிய தியான முறைகளை ஓசோ உருவாக்குவதற்கு அடி;பபடையாக இருந்தன எனலாம்.
தியானம் என்பது எண்ணங்கள் அற்று அமைதியாக ஆறுதலாக இருப்பது மட்டுமல்ல.  ஒரு வேலையில் முழுமையாக ஈடுபடுவதும் அதாவது உடல், மனம், ஆன்மா ஒன்றினைந்து ஈடுபடுவதும் தியானமாகும். இவ்வாறன ஒரு நிலையை வழமையான பராம்பரிய தியான முறைகள் மூலம் அடைவதற்கு நீண்ட கால தொடர்ச்சியான பயிற்சி தேவைப்படுகின்றது. இதற்கு காரணம் இந்த முறைகளில் இருக்கின்ற பற்றாக்குறை என்கின்றார் ஓசோ. ஏனனில் ஒருவர் அமைதியாக இருப்பதற்கு முதல் அவர் பதட்டமாக இருப்பதை குறைக்கவேண்டியது அவசியமானதாகவும் தேவையானதாகவும் உள்ளது. இந்தப் பதட்ட நிலையை குறைக்கும் பொழுது ஒருவரின் உடலும் மனமும் தானாகவே அமைதியையும் ஆறுதலையும் அடைவதுடன் இதன் விளைவாக அமைதி தொடர்பான அனுபவத்தை; nறுகின்றார் ( ஓசோ );. ஆகவேதான் தனது தியான முறைகளை ஓசோ இரண்டாகப் பிரிக்கின்றார்.
 இவரது தியானங்களில் முதலாவது பகுதி என்பது செயற்பாட்டுப் (Active) பகுதியாகவும் இரண்டாவது பகுதி அமைதியான (Passive) ஆறுதலான பகுதியாகவும் இருக்;கின்றன. முதலாவது பகுதியானது கத்துதல், அலம்புதல், கோவப்படுதல், ஆழமான விரைவான மூச்சு விடுதல், துள்ளுதல், ஆடுதல், அழுதல், சிரித்தல் என்பவற்றை பிரக்ஞையுடன் செய்கின்ற பயிற்சிகளைக் கொண்டதாகும். (D’Andrea, 2007; Vyas, 2007) . அதாவது இவ்வாறு செய்வதன் மூலம் ஒருவர் தனது அடக்கப்பட்ட உணர்வுகள் உணர்ச்சிகள் என்பவற்றை வெளியேற்றி தனது மனதை சுத்தமாக்கி உடலையும் ஆறுதல்படுத்துகின்றார். இதன் மூலம் தனது மனம் உடல்; ஆகிய இரண்டுடனும்; மீண்டும் ஒன்றினைகின்றார்;. இதன் விளைவாக ஒருவருக்கு தியான நிலையானது இயற்கையாகவே ஏற்படுகின்றது. மேலும் இதன்பின் தனது மூச்சை தொடர்ச்சியாக ஒருவர் கவனிப்பதன் மூலம் தியானத்தின்; சிறிய அனுபவத்தை ஒருவர் விரைவாக பெறமுடிகிறது என்கின்றார். இதனால் தான் ஓசோ தனது தியான முறையில் இவ்வாறான முதல் பகுதியை உருவாக்கினார். இதன்பின்பே ஒசோ தியானத்தின் இரண்டாவது பகுதியான பிரக்ஞையுடன் கவனித்தல் அல்லது அமைதியாக இருத்தல் என்பவற்றை உள்ளடக்கினார். ஏனனில் இவ்வாறன ஒரு மன அமைதியும் உடல் ஆறுதலாக இருக்கின்ற நிலையில்தான் பாரம்பரிய தியான முறையை பயிற்சி செய்வது இலகுவானதாக இருக்கின்றது.
போராசிரியர் லெஸ்லி கீரின்பேக்  (Leslie Greenberg, 2008) தனது உணர்ச்சிகளை மையப்படுத்தியும் அதை வெளிப்படுத்தும் உளவியல் சிகிச்சை தொடர்பான பரிசோதனை அடிப்படையிலான விஞ்ஞான ஆய்வின் மூலம் அதன் முக்கியத்துவத்தை நிறுபித்துள்ளார். இவரது ஆய்வின்படி ஒருவருக்கு தனது உணர்ச்சிகளை வெளியேற்றுவதற்கான சந்தர்ப்பம் கிடைக்குமாயின் அவரது மனமும் உடலும் ஆறுதலடைகின்றது என்கின்றார். போராசிரியர் கீரின்பேக்கின் இவ்வறான ஆய்வின் முடிவுகள் ஓசோ முன்வைக்கின்ற தியானத்தின் முதலாவது பகுதியை விஞ்ஞான ஆய்வின் அடிப்படையில் உறுதிப்படுத்துகின்றது எனக் கூறலாம். அதாவது கீரின் பேக்கின் ஆய்வின் முடிவின்படி ஒருவர் ஆரோக்கியமான உடலும் மனமும் இருக்கவேண்டுமாயின் உணர்ச்சிகளை வெளிப்படுத்தலும் பிரக்ஞையும் முக்கியமானது எனக் கூறுகின்றார். மறுபுறம் உணர்ச்சிகளின் வெளிப்பாடானது ஒருவரது மனச் சோர்வை மன அழுத்தத்;தை குறைப்பதற்கும் மற்றும் ஆறுதலையும் பிரக்ஞையையும் அதிகரிப்பதற்கும் முக்கியமானதாகும் என ஓசோ கூறுகின்றார். ஏனனில் மன அழுத்தம் மனச் சோர்வு என்பன நாம் உணர்ச்சிகளை அடக்குவதாலையே உருவாகின்றன என்கின்றார். இந்தக் கூற்றுகளை புலமைசார்ந்த ஆய்வுகளும் வலிறுத்துகின்றன. அதாவது அழுகை போன்ற உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதானது ஒருவர் ஆறுதலடைய வழி செய்கின்றது. இவ்வாறு வெளிப்படுத்தாது விடுவாரேயானால் அவருக்கு உடல் மற்றும் உளவில் ரீதியான பாத்திப்புகளும் மற்றும் மனச் சோர்வு மன அழுத்தம் என்பன ஏற்படலாம் என்கின்றனர். இதனால் உணர்ச்சிகளை நேர்மறை எதிர்மறை என பாகுபடுத்துவது கஸ்டமானதாக உள்ளது எனனில் இரண்டுவகையான உணர்ச்சிகளின் வெளிப்பாடும் ஒரு மனிதரை குணப்படுத்த உதவுகின்றது என்கின்றார் கீரின்பேக்.
மறுபுறம் இந்த உணர்ச்சியானது மேலோட்டமானதா அல்லது இதுவே மன் அழுத்தத்திற்கும் பிற உளவியல் பிரச்சனைகளுக்கும் பிரதானமான அடிப்படை உணர்ச்சியா என்பதை அறிந்து கொள்ள வேண்டியுள்ளது என்கின்றார் கீரின்பேக். இந்த அறிதலே குறிப்பிட்ட மனிதரின் உடல் மற்றும் உளவியல் பிரச்சனைகளை குணப்படுத்துவதற்கு உதவி புரியும். ஒரு உணர்ச்சியை வெளிப்படுத்தும் போது அது இன்னுமொரு அடக்கப்பட்ட உணர்ச்சி வெளிவருவதற்கான சந்தர்ப்பத்தை உருவாக்குகின்றது என்பதை ஓசோ மட்டும்ல்ல இவ்வாறன ஆய்வுகளில் ஈடுபட்ட அனைவரும் உடன்படுகின்றனர் (Pascual-leone & Greenberg, 2007). அதாவது ஒருவர் சிரிக்கும் பொழுது அழுகையும் அழும் பொழுது சிரிப்பும் மிக இயல்பாக வெளிப்படுகின்றன (osho). இவ்வாறு இரண்டாவதாக வெளிவருகின்ற உணர்ச்சியே ஒருவரது மன அழுத்தம் அல்லது மனச் சோர்விற்கான பிரதானமான அடிப்படைக் காரணமாக இருக்கின்றது  (Greenberg, 2007).  அதாவது ஒருவரது உளவியல் பிரச்சனைக்கான மூலமாக இருக்கின்றது. ஆகவே ஒருவர் ஒரு உணர்ச்சியை ;இது எந்தவகையான உணர்ச்சியாக இருந்தபோதும் அதை வெளிப்படுத்தும் பொழுது அதை பிரக்ஞையுடன் கவனிப்பது மட்டுமல்ல ஏற்றுக்கொள்ளவும் வேண்டும் என்கின்றனர். இவ்வாறு மனிதர்கள் தமது அடக்கப்பட்ட உணர்ச்சிகளை வெளிவிட்டபின் அவர்களை நேர்மறையான ஆற்றலுக்கும் வாழ்வின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தவும் நேர்மறையான சக்தி தேவைப்படுகின்றது. இந்த வேலையை சிரிப்பு செய்கின்றது.
 
சிரிப்பு தொடர்பான மேலதிக விரிவான விபரங்களை “சிரி….சிரி…சிரிப்பு – இயற்கை தந்த பரிசு. – கிழக்கு – மேற்கு விஞ்(ஞானி)களின் ஆய்வுகள் – ஒரு முன்னுரை” இந்தக் கட்டுரையில் பார்க்கலாம். சிரிப்பு இரண்டுவிதமான செய்பாடுகளை மேற்கொள்கின்றது. முதலாவது சிரிப்பு மன அழுத்தத்தையும் மன்ச் சோர்வையும் குறைத்து எதிர்மறையான உணர்ச்சிகளை நேர்மறையாகவும் மாற்றவும் செய்கின்றனது. மேலும் அதிகளவான செயற்திறனை அதிகரிக்கின்ற மனித சக்தியையும் உருவாக்கவும் உதவுகின்றது (ஓசோ 2003, 1995). ஆகவே சிரிப்பை ஒரு மருந்தாகப் பயன்படுத்தலாம் என்கின்றனர் (Davidhizar and Bowen, 1992). இது மனிதர்களிடம் இருக்கின்ற இயற்கையான சக்தி என்பதுடன் பல உடல் உளவியல் பிரச்சனைகளை தீர்ப்பதற்கும் வழிசெய்கின்றது. ஒருவர் முழுமையாகவும் நன்றாகவும் சிரிப்பாரேயானால் அவருக்கு தியான நிலை தானாகவே உருவாகலாம் ( ஓசோ ). ஆகவே தான் உணர்ச்சிகளை வெளியேற்றிய பின்பும் மனதை சுத்தம் செய்த பின்பே தியானம் செய்வது இலகுவானதாக இருப்பதால் தியானம் அல்லது அமைதியாக கவனித்தல் என்பதை தனது முறையின் இரண்டாவது பகுதியாக ஓசோ இணைத்துள்ளார்.
தியான நிலை என்பது அமைதியாகவும் அதேநேரம் ஒன்றில் முழுமையாகவும் பிரக்ஞையாகவும் இருப்பதாகும். இது மனதிலிருந்து எண்ணங்களை நீக்குவதற்கும் மற்றும் மனம் உடல் என்பன ஆறுதலாக இருப்பதற்கும் உதவுவதுடன் தன்னிலையை அறிவதில்  முக்கிய பங்காற்றுகின்றது ( Rubia 2009).  அதேநேரம் எந்த ஒன்றையும் மதிப்பிடாமல் இருப்பதற்கும் இது வழிசெய்கின்றது (Sutorius , 1995). ஆகவே தியானமானது உடல் மன ஆறுதலை தருவதுடன் உடல் உள்ளம் மனம் உணர்ச்சிகள் என்பவற்றுக்கிடையில் சமநிலையைப் பேணுகின்றது. மேலும் ஆங்கில மருந்துகள் உருவாக்கும் பக்கவிளைவுகள் போல் தியானம் செய்வதால் ஏற்படுவதில்லை என்பதுடன் தியானத்தை நாம் இலவசமாகவே செய்யலாம் என்கின்றனர் (Rubia 2009). அதாவது தியானம் என்பது இயற்கையான மருந்து என்பதுடன் மனச் சோர்வு அழுத்தம் என்பவற்றைக் குறைப்பது மட்டுமல்ல பல உளவியல் பிரச்சனைகளை தீர்த்து நேர்மறையான பக்கவிளைவுகளைத் ஆரோக்கியமாக வாழ்வதற்குத் தருகின்றது (Oman et al., 2008; Skevington & White, 1998). இது பல விஞ்ஞான அடிப்படையிலான பரிசோதனை ஆய்வுகள் மூலம் நிறுப்பிக்கப்பட்டுள்ளது (2008). மேலும் ஓசோவைப் பொறுத்தவரை தியானம் என்பது ஒருவரது பிரக்ஞையை மேன்மேலும் வளர்ப்பதற்கும் அதாவது மனிதரது பரிணாம வளர்ச்சிக்கும் இக் கணத்தில் முழுமையாக வாழ்வதற்கும் உதவி செய்கின்றது. பிரக்ஞை தொடர்பான விரிவான கட்டுரையைப்  “பிரக்ஞை: ஆரோக்கியமான படைபாற்றாலுக்கான மூலம்!” பார்க்கவும்
 
முடிவாக சிரிப்பு, அழுகை, கோவம் போன்ற உணர்ச்சிகளின் வெளிப்பாடானது ஒருவரில் ஆறுதலை ஏற்படுத்தவும் மனச் சோர்வை குறைப்பதிலும் முக்கிய பங்காற்றுகின்றன. இதை நிறுபிப்பதற்காக ஓசோவின் தியான முறைகளை பரிசோதனை அடிப்படையிலான ஆய்வுகள் செய்வதன் மூலம் நிறுபிக்கலாம். பல வகையான ஓசோ தியான முறைகள் உள்ளன. இவை அணைத்திலும் முதல் பகுதி பல வகையான உடல் அசைவுகளை இயக்கங்களைக் கொண்டதும் இரண்டாவது பகுதி அமைதியானதும் ஆறுதலானதும் பிரக்ஞையுடன் கவனிப்பதுமாகும். இதை ஒசோவின் அமைதியான தியான முறையான விப்பாசனாவுடன் அதாவது முழுநேரமும் மூச்சைக் கவனிக்கும் முறையுடன் ஒப்பிட்டு இந்தப் பரிசோதனையை நிகழ்த்தலாம்.
உதாரணமாக ஓசோவின் பின்வரும் தியான முறைகள் விஞ்ஞான ரீதியான பரிசோதனை ஆய்விற்காக பயன்படுத்தலாம். இவரது தியான முறைகளிலையே மிகவும் பிரபல்யாமானதும் முக்கியமானதுமான தியான முறை ஓசோ டைனமக் தியானம் ஆகும். இது முதலில் விரைவான மூச்சை வெளிவிடுதலுடன் ஆரம்பித்து பின்பு நமது உணர்ச்சிகளை வெளிப்படுத்தலுடன் (கோவம் சிரிப்பு அழுகை) தொடர்ந்து துள்ளுவதன் ;மூலம் நமது சக்தியை தட்டி எழுப்புவதுடன் முதல் பகுதி நிறைவடைகின்றது. பின் இந்த செயற்பாடுகளினால் ஏற்பட்ட் மாற்றங்களை பிரக்ஞையுடன் அவதானித்தல் நாம் தியான நிலையை உணர்வதற்கான பகுதியாக இருக்கின்றது. இறுதியாக நாம் புதிதாக உணர்ந்ததை அனுபவித்ததை ஆனாந்தமாக கொண்டாடி மகிழ்கின்றமை இறுதிப்பகுதியாகும். இவ்வாறு ஓசோ டைனமிக் தியானம் ஜந்து பகுதிகளை கொண்டுள்ளது.
இதேபோல நமது உடம்;பை முழுமையாகக் குழுக்குவதன் மூலம் நமது மூட்டுக்களில் உறைந்து கிடக்கும் நமது சக்திகளை எழுப்புதல் எனப்படும் குண்டலினி தியானம் இவ்வாறான ஆய்வுக்கு உட்படுத்தக்கூடியது ஆகும். மேற்குறிப்பிட்டவாறு உடலைக் குழுக்குவதன் மூலம் உயிர்ந்தெழுந்த நமது சக்திகைள் ஆடல் மூலம் நேர்மறையாகப் பயன்படுத்துவதுடன்; இறுதியாக அதுவரை நடைபெற்ற மாற்றத்தை அமைதியாக இருந்து பிரக்ஞையுடன் கவனித்தல் என்பதுடன் நிறைவு பெறுகின்றது..
இறுதியாக சிரிப்பு தியானம். காரணங்கள் எதுவுமில்லாது சிரித்தல். புpன் அமைதியாக இருந்து மாற்றத்தை கவனித்தல். இதையும் ஆய்வுக்கு உட்படுத்தலாம்.
இவ்வாறன தியானமுறைகள் போரினாலும் மற்றும் வன்முறைகளாலும் பாலியல் துன்புறுத்தல்களாலும் மற்றும் இயற்கை அனர்ந்தங்களாலும் பாதிக்கப்பட்டிருக்கின்ற மனிதர்களுக்கு பலவிதங்களில் உதவி செய்யக் கூடியது. ஏனனில் இந்த மனிதர்கள் மேற்குறிப்பிட்ட பிரச்சனைகளால் பல வகைகளிலும் உளவியல் மற்றும் மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகவே இவ்வாறன பயிற்சிகள்; மூலம் அந்த மனிதர்;களை மீளவும் நம்பிக்கையுடன் வாழ்வதற்கு வழிவகுக்கலாம். இந்தப் பயிற்சிகள் இவ்வாறான நேர்மறை விளைவுகளைத் வழங்குமா என்பது தொடர்பாக விஞ்ஞான அடிப்படையில் ஆய்வு செய்து நிறுபிக்க்லாம். இதன் மூலம் மனிதர்களி;ன் குறிப்பாக பாதிக்கப்பட்ட மனிதர்களின் தொடர்ச்சியான பயன்பாட்டுக்கு உகந்தது என சிபார்சு செய்யலாம்.
இலங்கையின் வடக்கு கிழக்கில் வாழ்கின்ற மனிதர்களுக்கு உதவ விரும்புகின்றவர்களும் இவ்வாறன விடயங்களில் அக்கறையும் ஆர்வம் உள்ளவர்களும் இது தொடர்பாக சிந்திக்கலாம். ஆதற்கான ஒரு ஆரம்பமே இந்தக் கட்டுரை. ஏனனில் ஆரோக்கியமான ஒரு சமூகமே தனது உரிமைகளுக்காவும் விடுதலைக்காகவும் போராடுவதற்காக ஆரோக்கிமான ஒரு பாதையை தேர்தெடுத்து செயற்பட முடியும்.
மீராபாரதி
படங்கள்: osho.com
இணைப்பில் உள்ள கட்டுரைகளைப் பார்ப்பதற்கு
http://awakeningawareness.org/
 http://praknjai.blogspot.com/
http://meerabharathy.wordpress.com/category/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d/
 உசாத்துணைகள்

  • Cueva, M., Kuhnley, R., Lanier, A., & Dignan, M. (2006). Healing hearts: Laughter and learning. Journal of Cancer Education, 21(2), 104-107.
  • Canadian Mental Health Association, (2011). Coping with Stress. Mental Health Week. Retrieved, 05, 2011, from http://www.cmha.ca/bins/content_page.asp?cid=2-28-30&lang=1.
  • D’Andrea, A. (2007). Osho international meditation resort (PUNE, 2000s): An anthropological analysis of sannyasin therapies and the Rajneesh legacy. Journal of Humanistic Psychology, 47(1), 91-116.
  • Davidhizar, R., & Bowen, M. (1992). The dynamics of laughter. Archives of Psychiatric Nursing, 6(2), 132-137.
  • Donnellan, M. B., Oswald, F. L., Baird, B. M. & Lucas, R. E. (2006). The Mini-IPIP Scales: Tiny-yet-effective measures of the Big Five Factors of Personality. Psychological Assessment, 18(2), 192-203.
    Gillani, N.B., & Smith, J.C.  (2001). Zen meditation and ABC relaxation theory: An exploration of relaxation states, beliefs, dispositions, and motivations. Journal of Clinical Psychology, 57(6), 839-846.
  • Greenberg, L. (2008). Emotion and cognition in psychotherapy: The transforming power of affect. Canadian Psychology, 49(1), 49–59.
  • Keltner, D., & Bonanno, G.A. (1997). A study of laughter and dissociation: Distinct correlates of laughter and smiling during bereavement. Journal of Personality and Social Psychology, (73)4, 687-702.
  • Kuiper, N. A., & Martin, R. A. (1998). Laughter and stress in daily life: Relation to positive and negative affect. Motivation and Emotion, 22(2), 133-153.
  • Martin, R.A. (2001). Humor, laughter, and physical health: Methodological issues and research findings. Psychological Bulletin, 127(4), 504-519.
  • National College Health Assessment Survey Results, (2010). Retrieved December, 13, 2010, from York University website: http://www.yorku.ca/scld/healthed/ncha_survey.html#stress.
  • Oman, D., Shapiro, S. L., Thoresen, C. E., Plante, T. G., & Flinders, T. (2008). Meditation lowers stress and supports forgiveness among college students: A randomized controlled trial. Journal of American College Health, 56(5), 569-578.
    • Osho. (2010). The Psychology of the Esoteric. Retrieved December, 4, 2010, from http://www.osho.com/Main.cfm?Area=Magazine&Language=English.
    • Osho. (2003). Meditation: The art of ecstasy. (5th ed.) Pune: Tao Publishing Pvt. Ltd,
    • Pascual-leone, A & Greenberg, L.S. (2007). Emotional processing in experiential therapy: Why “the Only Way Out Is Through”. Journal of Consulting and Clinical Psychology, 75(6), 875–887.
    • Rubia, K. (2009). The neurobiology of meditation and its clinical effectiveness in psychiatric disorders. Biological Psychology, 82, 1-11.
    • Shao, R., & Skarlicki, D. P. (2009). The role of mindfulness in predicting individual performance. Canadian Journal of Behavioural Science, 41(4), 195-201.
    • Skevington, S. M., & White, A. (1998). ‘Is laughter the best medicine?’ Psychology & Health, 13(1), 157-169.
    • Smith, J.C. (2005). Assessment Tools. In Relaxation, meditation, & mindfulness: A Mental health practitioner’s guide to new and traditional. (chap.17) Retrieved October, 22, 2010, from York University Library website: http://site.ebrary.com/lib/oculyork/Top?id=10265596.
    • Sutorius, D. (1995). The transforming force of laughter, with the focus on the laughing meditation. Patient Education and Counseling, 26, 367 – 371.
    • Toneatto, T. & Nguyen, L. (2007). Does mindfulness meditation improve anxiety and mood symptoms? A review of the controlled research. Canadian Journal of Psychiatry, 52(4), 260-266.
      • University Health Network, (2011). Mindful Cognitive-Behaviour Therapy Program. Retrieved, 05, 2011, from http://www.uhn.ca/About_UHN/programs/pain_management/docs/mindfulness.pdf.
      • http://www.uhn.ca/About_UHN/programs/pain_management/patientinfo/mindfulness.asp
      • Vyas, A. (2007). Effects of Seven-Day Osho Dynamic Study: A Pilot Study. Psychological Science: Research, Theory and Future Directions. Ed. by Kostas Andrea Fanti. ATINER.
      • Weiss, M.,  Nordlie, J.W. & Siegel, E.P.(2005). Mindfulness-Based Stress Reduction as an adjunct to outpatient psychotherapy. Psychotherapy and Psychosomatics, 74(2), 108-112. http://site.ebrary.com/lib/oculyork/Top?id=10265596.
      • Zayfert, C & Becker, C.B. (2007). Cognitive-Behavioural Therapy for PTSD. A case formation Approach. The Guilford Press. New York.

Sunday, May 15, 2011

நமக்காகவே மனம்!

Saturday, May 14, 2011

பெண்; விடுதலை! ஒரு புதிய பார்வை…பாதை…

பெண் விடுதலை சுதந்திரம் தொடர்பாக விழிப்புணர்வு இன்றைய உலகில் அதிகரித்துவருவது முன்னேற்றமான விடயம். குறிப்பாக ஆண்களும் கடந்தகால ஆண்மைத் தன்மையின் இயல்புகளின் தவறுகளையும் அதன் பெண்ணீய எதிர்ப்புணர்வையும் புரிந்து கொள்ளவும் அதிலிருந்து விடுபடவும் முயற்சிக்கும் முக்கியமான காலகட்டம் இது. ஆகவே சமூக அரசியல் தளங்களில் மட்டுமல்ல ஆன்மீகத்திலும்; பெண்கள் பெண்ணீயம் தொடர்பான தமது நிலைப்பாட்டை முன்வைப்பது தவிர்க்க முடியாததாகிவிட்டது. காரணம் கடந்தகாலங்களில் சமய நிறுவனங்கள் பெண்ணை பெண்மையை அடக்கி ஒடுக்குவதில் பெரும் பங்காற்றியிருக்கின்றன என்பது வெளிப்படையான உண்மை.
சமய நிறுவனங்களிலிருந்து ஆன்மிக செயற்பாட்டை பிரித்து எடுத்து தனித்து நிறுத்த வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயம். ஏனனில் ஆன்மீகம் தனிநபர் சுதந்திரம் விடுதலை தனித்தன்மை சார்ந்தது. ஒவ்வொருவருக்கும் தனித்தனியான பாதை இது. ஆண் பெண் என்ற வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டது.

உண்மையில் பெண்ணீய பிரச்சனை என்பது தவறான ஒரு ஆரம்பம்.
பிரச்சனை ஆண்களினதே. அவர்களது மன உளவியல் சார்ந்த தாழ்வுச்சிக்கலில் உருவானதே பெண் அடிமைத்தனம். ஆகவே அவர்கள் உளவியல் ரீதியாக சிகிச்சைக்கு உட்படுத்தப்பட வேண்டியவர்கள். இவர்கள் குணமடையும் பொழுது பெண்களைப் புரிந்துகொள்வார்கள். மதிப்பார்கள். பெண்கள் தம் இயல்பை பெண்மையை பற்றி பெருமை கொள்ள வேண்டும். ஆணாதிக்கம் விதைத்த பெண்களுக்கு எதிரான கருத்துக்களை தம் ஆழ் மனங்களிலிருந்து வேரோடு வெட்டி எறியவேண்டும்.

பெண்மையின் சக்தி கண்டு பயந்த ஆரம்ப கால மனிதர் பெண்மையின் இயல்புகளை பண்புகளை குற்றம் கூறி குறை கண்டனர். அதனை வெளிப்படுத்தாதவாறு வரைமுறைகளை அமைத்து அடக்கினர். மீறி வெளிப்படுத்தியவர்களை பல்லாயிரம் ஆண்டுகளாக கண்டித்தனர், தண்டித்தனர். கீழ்தரமாகவும் தாழ்நிலையிலும் அவமதிப்புக்குள்ளாக்கப்பட்ட
னர். இது பெண்களின் இரத்தத்திலும் எலும்புகளிலும் நன்றாக ஊடுருவியுள்ளது. ஆண்களின் குறிப்பாக ஆண்தன்மையின் இயல்புகளும் பண்புகளும் பெண்களினதிலிருந்து முற்றிலும் வேறுபட்டவை. ஆண்களால் முடியாத ஒன்று பெண்களால் முடியும் என்பது ஆண்களிடம் தாம் அவர்களைவிட குறைந்தவர்கள் என்ற தாழ்வுச் சிக்கலையும் இயலாமை உணர்வையும் உருவாக்கிவிட்டது. குறிப்பாக பெண்கள் குழந்தைகளைப் பெறுவதும் ஒன்றுக்கு மேற்பட்ட காம இன்ப (orgasm) உணர்வை அடுத்தடுத்து இயல்பாகப் பெறுவதும் ஆண்களால் முடியாத ஒன்று. இதுவும் ஆண்களிடம் தாழ்வுச்சிக்கலை உருவாக்கியது. தாம் உயர்ந்தவர்கள் என்பதை நிலைநாட்டுவதற்கு பெண்களை தம் உடலற்பலம் கொண்டு அடக்குவதையும் அவர்களது பண்புகளையும் இயல்புகளையும் சட்டங்கள் இயற்றிக் கண்டித்தனர். இவ்வாறு மிகப் பலமாக இருந்த பெண்ணை பெண்மையை பல்லாயிரம் ஆண்டுகளாக “பெண் பலகீனமானவள்”எனக் கூறி பெண்ணினது அடி மன ஆழத்தில் இக் கருத்தியலைப் புதைத்துள்ளனர்.

கடந்த காலங்களில் பல ஆயிரம் பெண்கள் பேரின்பத்தின் ஒரு பகுதியான சிற்றின்பம் (orgasm) என்ன என்பது தெரியாமலே தாமும் அதற்கு தகுதியானவர்கள் அனுபவிக்கக் கூடியவர்கள் என்பதை அறியாமல் வாழ்ந்து இறந்திருக்கின்றனர். ஆண்களால் தொடர்ச்சியாக இன்பத்தை வழங்க முடியாததாலும், பெண்ணுக்கு காம இன்பம் (orgasm) என்னவென்று தெரியுமாயின் ஆணால் ஒரு முறைகூட பெண்ணை திருப்தி செய்யமுடியாது என்பதை பெண் கண்டு பிடித்துவிடுவாள் என்பதாலும் பெண்ணுக்கு காம இன்பம் (orgasm) கிடைக்காதவாறு அது என்னவென்று அறிய முடியாதவாறு பெண்களை அடக்கி ஒடுக்கினர். தடைகளையும் பிரச்சனைகளையும் உருவாக்கினர் ஆண்கள்.

இந்த நூற்றாண்டிலையே காம புணர்வில் இருக்கும் பொழுது உருவாகும் குறிப்பான இன்பம் (orgasm) அடையாளங் காணப்பட்டது. இந்த இன்பம் தொடர்பாக கிழக்கிலோ மேற்கிலோ எந்தவிதமான பாலியல் நூல்களிலும் அதுவரை குறிப்பிடவில்லை. இது மிகவும் முரண்பாடானது.

ஆண்களுக்கு பெண்கள் என்றும் கவர்ச்சியாக இருக்கின்றனர். அழகாகவும் இருக்கின்றனர். ஆகவே பெண்களிடம் காதலில் விழுகின்றனர். பெண் ஆணிண் போதையாகின்றாள். இங்கு மேலும்; பிரச்சனை ஆரம்பிக்கின்றது. பெண்களிடம் தாம் தங்கியிருக்கின்றோம் என்பது ஆணால் சகிக்கமுடியாததாக ஏற்றுக்கொள்ள முடியாததாக மனதைத் துன்புறுத்துகின்றது. ஆண்களின் இந்த உணர்வானது பெண்களை மேலும் அடிமைப் படுத்துவதற்கு வழிகோலியது. மேலும் பெண் அழகாக இருப்பது ஆணுக்கு மேலும் பயத்தை அதிகரித்தது. காரணம் ஒரு ஆணுக்கு மட்டும் பெண் அழகாக இருக்கமுடியாது அவளைப் பார்க்கும் எல்லா ஆண்களுக்கும் அவள் அழகாக இருப்பாள். இது அவளுடன் தொடர்பு கொள்ளவும் உறவை ஏற்படுத்தவும் வழியமைக்கின்றது. ஆணாதிக்க மனதில் அவனது தன்முனைப்புக்கு இது பெரும் சவாலான பிரச்சனையாக இருக்கின்றது.

பெண்களுக்கு எதிரான போக்கு அடக்குமுறை நாடுகளுக்கு தேசங்களுக்கு பண்பாடுகளுக்கு கலாசாரங்களுக்கு அப்பாற்பட்டு எங்கும் பொதுவானதாக இருந்திருக்கின்றது. ஏனனில் உலகில் உள்ள அனைத்து ஆண்களின் மனோபாவம் தான் பெரியவன் பலசாலி புத்திசாலி திறமைசாலி என தன் தாழ்வுச்சிக்கலால் நிறுபிக்க வேண்டிய உறுதி செய்யவேண்டிய மனப்பான்மை இருக்கின்றது. நாம் ஒன்றை நிறுபிக்க முற்படுகின்றோமாயின் நாம் அவ்வாறு இல்லை என்பதானால் தான். உண்மையிலையே உயர்ந்தவருக்கு தன்னை நிறுபிக்கவேண்டிய தேவையில்லை. சாட்சிகளோ காரணங்களோ தேவையில்லை. ஒருவர் எல்லாவற்றிலும் உயர்ந்தவரர் எனின் குறைந்த புத்தியுள்ளவரால் கூட அடையாளம் காணமுடியும். ஏனனில் அவரிடம் அந்த காந்த சக்தி இருக்கும். பெண்ணை கட்டுப்படுத்தி அடக்கி வைத்திருப்பதற்காக பெண்ணை ஒரு உப மனித இனமாகவே ஆண் அடையாளப்படுத்தினான். தனக்கு சரிசமமானவள் எனக் கருதியதில்லை.

இயற்கை மிகவும் சக்திவாய்ந்தது. புத்திக் கூர்மையானது.(intelligent) இதனால் தான் பெண்களுக்கும் ஆண்களுக்கும் வௌ;வேறு பண்புகளையும் இயல்புகளையும் படைத்துள்ளது. ஓவ்வொரு பண்புக்கும் இயல்புகளுக்கும் ஒவ்வொருவிதமான பொறுப்புக்கள் வாழ்க்கையில் உண்டு. எந்த ஒரு இயல்போ பண்போ ஒன்றைவிட ஒன்று குறைந்ததுமல்ல கூடியதுமல்ல. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பணி. இதைப் புரிந்துகொண்டு நம் பணிகளையும் பொறுப்புக்களையும் முழுமையுடன் செய்யும் பொழுது வாழ்வு மட்டுமல்ல ஒவ்வொரு கணமும் நிறைவு பெற்று ஆனந்த மயமாக இருக்கின்றது. ஆணுக்கு நிகராய் பெண்ணும் வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்திலும் பங்குபெற வேண்டும். ஆண்கள் (ஆண் தன்மை போக்கு) மட்டும் பங்கு பெறுவதனாலையே யுத்தங்களும் ஆயுதப் போராட்டங்களும் பயங்கரவாத பூச்சாண்டிகளும் ஆயுத உற்பத்திகளும் நடைபெறுகின்றன. வாழ்க்கiயில் அழகியல் என்பது பெண்களுக்கும் கலைஞர்களுக்கும் மட்டுமே உரித்தானதாகிவிட்டது.

பெண் விடுதலை முன்னணி உருவாக்கப்பட வேண்டும் ஆனால் அது எதிர்ப்புணர்வின் அடிப்படையிலோ கோவத்திலோ வெறுப்பிலோ உருவானதாக இருக்கக்கூடாது. மாறாக புரிந்துணர்வின் அடிப்படையிலும் அன்பு காதல் என்பவற்றின் அடிப்படையில் உருவாக்கப்பட வேண்டும்.இன்றைய பெண்விடுதலைப் போராட்டம் பிரங்க்ஞையற்ற ஆண்களுக்கு எதிரானதாக எதிர்விளைவாகவே இருக்கின்றது. இது மாறவேண்டும். கடந்த காலங்களிலிருந்து அடக்கியாளும் ஆண்கள் தாம் என்ன செய்கின்றோம் என்ற சுய பிரங்க்ஞை இன்றியே பெண்களைக் கொடுமைப்படுத்தி வந்தனர். அவர்களது மனதில் வேருண்டப்பட்ட கருத்துக்களில் இருந்தே செயற்பட்டனர். நாம் புரட்சி செய்ய வேண்டியது கடந்த காலத்திற்கு,! கடந்தகால ஆதிக்கத்திற்கு எதிராகவே! ஆணாதிக்க கருத்தியலுக்கு எதிராகவே! போராட்டம் நடைபெறவேண்டும்.

ஆண்கள் களைத்து தோற்றுப்போனார்கள்!
கடந்த மூவாயிரம் ஆண்டுகளில் ஐயாயிரம் யுத்தங்களை நடாத்தியிருக்கின்றார்கள். இரண்டு யுத்தங்களுக்கு இடையிலான காலமே அமைதியான சமாதான நாட்கள். உண்மையாக இவை அடுத்த யுத்தத்திற்கான தயாரிப்பு நாட்களே. ஆண்களுக்கு வழங்கப்பட்ட சந்தர்ப்பங்கள் போதும்.

இனிவரும் காலம் பெண்களின் காலம் என்பதே என் பார்வை. இது பெண்களுக்கான சந்தர்ப்பம். பெண்மையின் சக்தி செயற்பட இனி சந்தர்ப்பம் வழங்கப்படவேண்டும்.
பெண் தன்மையின் அடிப்படையில் பெண்கள் இயங்கவேண்டும். இதுவே எதிர்காலத்திற்கு நம்பிக்யையையம் ஒளியும் வழியும் தரும் என ஓசோ கூறுகின்றார்.


ஓசோவின் பெண் விடுதலை! புதிய பார்வை என்ற புத்தகம் மேலும் பல விரிவான விளக்கங்களைத் தருகின்றது

புதிய குழந்தை!

உறவு! வானத்தில் சுதந்திரமாய் பறக்க…..

காதல்: மானுடத்தின் வளர்ச்சிக்கு…