Monday, June 9, 2008

ஏன் இந்த மலர்?

“எனக்கு ஒன்றுமே தெரியாது.என்பது மட்டும் எனக்குத் தெரியும்”
இது சோக்கிரட்டிஸ் இரண்டாயிரத்தி ஐந்நூறு வருடங்களுக்கு முன்பு கூறியது.ஆனால் இன்றும் பொருந்துகின்றது.
உண்மையைத் தேடி அலைபவர்களுக்கு…
கூறியது? கேட்டது? அறிந்தது? எல்லாம் சொற்களால் அழங்கரிக்கப்பட்ட வெறும் வார்த்தை வர்ணங்கள். இந்த வர்ணங்களில் சிக்குண்டு கட்டுண்டு வெளியேற முடியாது தவிக்கின்றோம.;
எவ்வாறு வெளியே வருவது?எனத் தேடியபோது…
ஓசோ! என்ற சமுத்திரத்தைக் கண்டேன்குதித்தேன். முழ்கினேன்.
ஆனந்தக் கூத்தாடிக் கொண்டிருக்கின்றேன்.
சுவைத்ததோ ஒரு துளி…அது தந்த நிறைவில்தங்களுடன் பகிர்ந்துகொள்ள வருகின்றேன்.
நாம் பலதும் பேசுகின்றோம்;, ஆனாலும் பேசாதுவிடும் விடயங்கள் பலசக்தி! …பிரங்க்ஞை!காமம்! …காதல்! உறவு?…குழந்தைகள்!மனம்?…பண்பாடு?…கலை?… கலாசாரம்?பெண்!..பெண்மை!…ஆண்!…ஆண்மை!விடுதலை?…சுதந்திரம்?…..தியானம்!இப்படிப் பல….
ஓசோவின் வழிகாட்டலில்புதிய பார்வையில்… பாதையில்…இவற்றைப் பேச ஆரம்பித்துவைக்கின்றதுபிரங்க்ஞை எனும் இந்த மலர்;.
இவ் விடயங்;கள் தொடர்பான உங்கள் ஆய்வுகள் கருத்துக்கள்பிறரிடமிருந்து பெற்றவைசொந்த அனுபவத்தில் பெற்றவைதர்க்கத்தின் அடிப்படையில் பெற்றவை ..அனைத்தையும் எழுதுங்கள்.
பிரங்க்ஞையின் ஒளியில்ஒவ்வொருவரும் அவரவர் பாதைகளில் பயணிப்போம்விடியல் நோக்கி.. ..
புதிய பாதையில் தவழும் குழந்தை நான்.
நம்பிக்கையுடன் நடை பயில முயற்சிக்கின்றேன்ஏழு ஆண்டுகள் தவழ்ந்து வந்த பாதை இது.இந்த உடலுக்கோ நீண்ட தூரம்…இயற்கைக்கோ இரண்டடி கூட இல்லை இது.இச் சிறு தூரத்தில் நறுமணம் தந்த மலர்கள் பல…
இத்தை பகிர்ந்து கொள்வதற்கான ஒரு முயற்சியே இந்த மலர்உங்களுக்கு நம்பிக்கையும் சிறு ஓளிக் கீற்றும் தெரிந்தால்நன்றி கூறுங்கள்
ஓசோ என்ற ஞானிக்கு..
புரியவுமில்லை ஓளியுமில்லை எனில்தவறு என்னுடையதுஎன் புரிதலில் ஆழம் காணாது..மீண்டும் முயற்சிக்கின்றேன் ஆழமாகச் சென்று அறிந்து..மீண்டும் வருகின்றேன்…புதிய புர்pதலுடன்….
இந்த மலர்!
ஒரு சுட்டுவிரல் மட்டுமே…நிலவைக் காண்பது அவரவர் பொறுப்பு.
சொந்த அனுபவம் பெற முயற்சித்துப் பாருங்கள்இப் பயணத்தைபுதிய பார்வையில்…பாதையில்…அனைவரையும் மதிக்கும்ஆனந்தமயமான பாதை….ஆழகான பாதை…
இது ஒரு புதிய பாதையல்ல…
நாம் மறந்துபோன பாதை… மீண்டும் பயணிப்போம்….
vks osho மீராபாரதி

No comments: