Monday, June 9, 2008

பிரக்ஞை

பிரக்ஞையாக இரு.
இருபத்தி நான்கு மணிநேரமும்பிரக்ஞை (awareness) யாக இரு.
இருபத்தி நான்கு மணிநேரமும்பிரக்ஞையாக இரு என்பது தான் ஓசோவின் பிரதான கற்பித்தல். அதாவது காலை எழுதலிலிருந்து இரவு நித்திரைக்குச் செல்லும் வரை மட்டுமல்ல நித்திரை கொள்ளும் பொழுதும்பிரக்ஞையாக இரு.இது நமக்கு பல வழிகளில் உதவிபுரிகின்றது எனக் கூறுகின்றார்.
நமது செயற்பாடுகள், சிந்தனைகள், எண்ணங்கள், மனம், உணர்வுகள், உணர்ச்சிகள் என்பவை தொடர்பாக நாம் பிரக்ஞையாக இருப்போமானால் அவற்றினால் உருவாகும் பாதிப்புகளிலிருந்து ஆதிக்கத்திலிருந்து விடுபடலாம் என்பது இவரது அனுபவம். இது இவரது மட்டுமல்லஇப் பாதையில் பயணித்த பலரது அனுபவம்.
நம் பிரக்ஞையற்ற செயற்பாடுகளின்விளைவுகளையே விதி எனவும், முற்பிறவியின் பயன் எனவும் கூறுகின்றோம்.
பிரக்ஞையற்ற செயற்பாடுகள் ஒரு எதிர் செயற்பாடக (reaction) இருக்கின்றன.இவ்வகையான எதிர் செயற்பாடுகள் முடிவற்ற தொடர்ச்சியைக் கொண்டிருக்கும். இதனால் தான் நேற்று அல்லது கடந்த வருடம் அல்லது கடந்த பிறவியில்(?) நாம் முன்னெடுத்த பிரக்ஞையற்ற செயற்பாடுகளின் விளைவுகளை இன்றும் நாம் எதிர்கொள்கின்றோம். இன்றைய பிரக்ஞையற்ற செயற்பாடுகளின் எதிர் விளைவுகளை அடுத்த நிமிடம் அல்லது நாளை அல்லது அடுத்த வருடம் நாம் எதிர்நோக்கலாம் என்பதில் சந்தேகம் இல்லை.
பிரக்ஞையான செயற்பாட்டை எவ்வாறு மேற்கொள்வது?
இதற்கு முதலில், நாம் பிரக்ஞையற்று எவ்வாறு வாழ்கின்றோம் என்பதைப் புரிந்து கொள்ளவேண்டியது அவசியமானது. நாம் ஒரு இயந்திரமாக வாழ்கின்றோம் என்பதை ஒருவரும் மறுப்பதற்கில்லை. நம் நாளாந்த செயற்பாடுகள் ஒவ்வொன்றும் இயந்திரத்தனமானவை. நம் உடலின் பகுதிகள் வேவ்வேறு செயற்பாடுகளை மேற்கொண்டிருக்கும் அதேவேளை மனம் இன்னுமொரு செயற்பாட்டைக் மேற்கொள்ளும். உதாரணமாக உணவை உட்கொள்ளும் பொழுது ஒரு கை உணவை எடுக்கும். மறு கை உடலைச் சோறியும். கால்கள் ஆடும். மனம் வேலை தொடர்பாக அல்லது காதலன் அல்லது காதலி தொடர்பாக சிந்திக்கும். இதயம் வேறு ஒரு பாதிப்பினாலோ அல்லது சந்தோசத்தினாலோ உணர்ச்சிக் கொந்தளிப்பில் இருக்கும்.
இவ்வாறு நம் உடல், மனம், ஆன்மா அனைத்தும் பிரிந்து (split) ஒரு நேரத்தில் பல வேலைகளில் பல முனைகள் நோக்கி செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. இம் மூன்றும் இணைந்த ஒருங்கினைந்த முழுமையான (total) செயற்பாட்டை நாம் முன்னெடுப்பது மிகவும் அரிது.
கலைஞர்களின் படைப்புக்கள் சிறப்பாக இருப்பதற்கு இவர்களது ஒருமித்த முழுமையான பிரக்ஞையான செயற்பாடே காரணம்.
மிகச் சில அரிதான நேரங்களில் இவ்வாறான செயற்பாடுகளை நாம் முன்னெடுப்போம். புதிய வேலைகளை செய்யும் பொழுது இந்த முழுமையான ஈடுபாடு உருவாகும். உதாரணமாக முதன் முதலாக கார் பழகும் பொழுது நம் ஒவ்வொரு அசைவுகள் தொடர்பாகவும் பிரக்ஞையாக இருப்போம். கை என்ன செய்கின்றது, கால் என்ன செய்கின்றது, நம் பார்வை என ஒவ்வொரு சிறிய விடயங்களிலும் நமது அவதானம் இருக்கும்.
பிரக்ஞை இருக்கும்.
ஆனால் கார் நன்றாக பழகிய பின் எந்தவிதமான அவதானமோ பிரக்ஞையோ இன்றி இவ் ஒவ்வொரு செயற்பாடுகளையும் இயந்திரத்தனமாக முன்னெடுப்போம். பழக்கப்பட்ட வீட்டு மாடுகள் போல்.
மனிதருக்கும் மிருகங்களுக்கும் இடையிலான வேறுபாடுதான்
இந்த பிரக்ஞை.
பிரக்ஞையான செயற்பாட்டிற்கு பிரதானமான எதிரி பிரக்ஞையற்ற மனம். மிருக நிலை என்பது நூறு வீதம் பிரக்ஞையற்ற (unconscious) செயற்பாடு.
நாம் இன்று மிருக நிலையிலிருந்து ஒரு வீதமே மனித நிலையை அடைந்திருக்கின்றோம்.சாதாரணமாக மனிதர்கள்ஒரு வீதம்;. பிரக்ஞையாகவும் (conscious) தொன்னூற்றி ஒன்பது வீதம் பிரக்ஞையற்றும் (unconscious) செயற்படுகின்றனர்.
தியானம் மூலம் படிப்படியாக இதிலிருந்து முன்னேறி நூறு வீதம் பிரக்ஞையாக (conscious) செயற்படும்போதே மனித பரிணாமவளர்ச்சி நடைபெறுகின்றது என்கின்றனர். மனிதரின் பரிணாமவளர்ச்சி தற்பொழுது முடங்கிப்போய்யுள்ளது எனக் கூறினால் மிகையாகாது. நூறுவீதம் பிரக்ஞையாக (conscious) செயற்படும் பொழுதே
அடுத்த நிலையான பிரக்ஞை (awareness) நிலைக்கு மானுடம் செல்லமுடியும்.இவர்களையே ஞானிகள் எனக் கூறுகின்றோம்.
பிரக்ஞை எனும் சாவியைக் கொண்டு நம்மை அறிந்து கொள்வதை மட்டுமல்ல இவ்வுலக பிரபஞ்ச உண்மையை அறிந்த கொள்ளவும் திறக்க முடியும் என ஓசோ மட்டுமல்ல அக்காலத்திலிருந்து பைதகரஸ், புத்தர், சோக்கிரட்டிஸ், லாவுஸ், சரசுத்ரா, இயேசு, நபி என இன்றுவரை உண்மையைக் கண்டறிந்த பலர் கூறுகின்றனர்.
இது மனிதரால் முடியாத கடினமான காரியமல்ல.
எல்லா விடயங்களும் முதல்; அடி எடுத்து வைப்பதன் மூலமே ஆரம்பமாகின்றது. தியான வழி முறைகள் நம் பிரக்ஞையான செயற்பாட்டிற்கு நம்மை தயார் செய்கின்றன. நம் உடலை, மனதை, ஆன்மாவை சுத்தம் செய்வது பிரக்ஞையான செயற்பாட்டுக்கு வழிவகுக்கின்றது.
பிரக்ஞையான (awareness) செயற்பாடு என்பது எப்பொழுதும் முழுமையானதாகவும் (totalness) பொறுப்பான செயற்பாடாகவும் (response, action) விழிப்பானதாகவும் (alert) இருக்கும். இவ்வாறான செயற்பாடுகள், இக் கனமே முழுமை பெற்றுவிடும்.இதனால் எதிர்காலத்ததில் விதியின் பயனை அனுபவிப்பதிலிருந்து விடுலை பெறலாம்.
இதற்கு இக் கணத்திலிருந்தே பிரக்ஞையாக செயற்பட வேண்டியது அவசியமல்லவா.?
நாம் இன்று எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு அடிப்படை நம் கடந்தகால செயற்பாடுகள். ஆகவேபிரக்ஞையான செயற்பாடுகள் (actions) அவசியம்.
நம் செயற்பாடுகளுக்கு அடிப்படைநம் சிந்தனைகள் எண்ணங்கள். ஆகவேபிரக்ஞையான எண்ணங்கள் (thoughts) அவசியம்நம் எண்ணங்களுக்கு அடிப்படைநம் உணர்வுகள். ஆகவேபிரக்ஞையான உணர்வுகள் (feelings) அவசியம்நம் உணர்வுகளுக்கு அடிப்படைநம் சக்திகள். ஆகவேசக்திகள்; (energy) தொடர்பான பிரக்ஞை அவசியம்நமக்கு சக்திகள் வழங்குவதுநம் மூச்சு. ஆகவேமூச்சு (breathing) தொடர்பான பிரக்ஞை அவசியம்.
பிரக்ஞை நம் வாழ்வின் அடிப்படை.
இதனை பயன்படுத்தாததால் எவ்வாறான பிரச்சனைகளை எதிர்கொள்கின்றோம் என்பதையும், நம் நாளாந்த வாழ்க்கையில் எவ்வாறு இதனைப் பயன்படுத்;தி நம் வாழ்வை ஆனந்தமயப்படுத்துவது என இனிப் பார்ப்போம்…
பிரங்க்ஞை தொடர்பாக மேலதிகமாக அறிவதற்கு ஓசோவின் புத்தகங்களை வாசியுங்கள். அத்துடன் நின்றுவிடாதீர்கள் தியானம் செய்யுங்கள் அனுபவத்தில் அறிவதற்கு.

No comments: