Monday, January 24, 2011

பிரக்ஞை – தியானம் – ஒரு மேற்குலக விஞ்(ஞான)களின் பார்வையில்…

பிரக்ஞை – தியானம் – ஒரு மேற்குலக விஞ்(ஞான)களின் பார்வையில்…

கிழக்குலகம் பல்லாயிரம் ஆண்டுகளாக தமது சுய பரிசோதனை மூலம் பரிச்சித்து கண்டறிந்த முறை தியானம். இதை அவர்கள் பயன்படுத்தியது என்னவோ ஆன்மீக தேடலுக்கும் தமது சமயம் சார்ந்துமே. புத்தர் அதிலொரு புரட்சியை ஏற்படுத்தியபோதும் துரதிர்ஸ்டவசமாக மீண்டும் அது சமய நிறுவனங்களின் ஆதிக்கத்திற்குள் சென்றுவிட்டது. ஆகவே தியானம் என்பது ஆன்மீக ரீதயான அதியுயர் நிலையை (ஞானமடைதல் அல்லது சமாதி நிலை) அடைவதற்கான ஒன்றாக ஒரு சமய வழிபாட்டு நெறியாகவும் குறிப்பாக வயது போனவர்களுக்கானதாகவும் மட்டுமே அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றது. மறுபுறம் தியானம் என்பது மேற்குலகில் பொதுவாக வியாபரா மயப்படுத்தப்பட்டு வெறும் உடல்> மன ஆறுதலுக்காக மட்டுமே அதிகமாக விளம்பரப்படுத்தப்பட்டு பயன்படுத்தப்படுகின்றது. ஆனால் இந்த இரு துருவ பயன்பாடுகளுக்கும் இடையில் தியானம் மனிதர்களுக்கு அதிகம் நன்மையளிக்கும்வகையில் பயன்படுத்தப்படக் கூடியது என்பதை அண்மைக்காலமாக தியானம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுவருகின்ற விஞ்ஞான ஆய்வுகள் அறிவிக்கின்றன. குறிப்பாக தியானத்தின் பயன்பாடு சாதாரண மனிதர்களுக்கு பலவகையில் பயன்தரக்கூடியதாக உள்ளது. மனிதர்களின் பழக்கவழக்கங்களை இயந்திரமயமாக்கலிலிருந்து விடுவித்து உயிரோட்டமுள்ள ஒரு செய்பாடாக மாற்றுவதற்கும்> மனித மனத்தின் முரண்பாடுகளை> மதிப்பீடுகளை> நேர்மறை> எதிர்மறை எண்ணங்களை> அதன் குழப்ப நிலையை புரிந்துகொள்வதற்கும்> மனித உணர்ச்சிகளையும்> உணர்வுகளையும் புரிந்துகொள்வதற்கும்> மனித செயற்பாடுகளை மேலும் வினைத்திறனுடனும் படைப்பாற்றலுடனும் வெளிக் கொண்டுவருவதற்கும் என பல்வேறு தளங்களில் சாதாரண மனித வாழ்க்கையை மேம்படுத்துவதற்குப் தியானம் பயன்படுத்தலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதைவிட மனிதர்களிடம் காணப்படுகின்றன பல்வேறுவிதமான உடல் உள மன நோய்களை மாற்றுவதற்கும் குணப்படுத்துவதற்கும் தியானப் பயிற்சி இன்று பயன்படுத்தப்படுகின்றது. மேலும் இம் மனிதர்கள் தியானப்பயிற்சியைத் தொடர்வதால் அவர்களுக்கு ஏற்படுகின்றன நேர்மறை விளைவுகளை விஞ்ஞான பரிசோதனை ஆய்வுகள் நிறுபிக்கின்றன. இது தொடர்பாக பேராசிரியர் தயா சோமசுந்தரம் அவர்கள் 1994ம் ஆண்டே பேராசிரியர் வித்தியானந்தன் நினைவாக ஆற்றிய “தன்னாத்மாவைத் தேடி அலையும் மனித[ர்]” என்ற உரையில் விரிவாக கூறியுள்ளார்.

துரதிர்ஸ்டவசமாக கீழக்குலகின் அறிவுகளை மேற்குலகின் அறிவுகள் ஏற்றுக்கொண்டு அந்த அறிவை அவர்கள் மீள கூறும்பொழுதே அதற்கான அங்கீகாரத்தை கீழக்குலக அறிஞர்களும் மனிதர்களும் வழங்குகின்றார்கள். அந்தளவிற்கு மேற்குலகின் அறிவின் மீது நம்பிக்கை மட்டுமல்ல அதன் மாயைக்குள்ளும் சிக்கியுள்ளோம். நம் அறிவை மனதை ஆக்கிரமித்திருக்கும் நவீன காலானியாதிக்கம் தொடர்பான நமது பிரக்ஞை எந்தளவு என்பது கேள்விக்குரியே. ஆனால் முரண் நகை என்னவெனில் இந்த காலனியாதிக்க அறிவின் அடிப்படையிலையே நாம் பிறந்த நாடுகளின் மீதான நவீன காலானியாதிக்கத்தை எதிர்க்கின்றோம். பெண்ணிலைவாதி ஒருவர் குறிப்பிடுவதுபோன்று அதிகாரத்த்திலுள்ளவர்களின் உபகரணங்களைக் கொண்டு அவர்களது வீட்டை உடைக்க பயன்படுத்தமுடியாது எனக் கூறுகின்றார். அதிகாரவர்க்கத்தை எதிர்ப்பவர்கள் இதை எப்பொழுது புர்pந்துகொள்கின்றோமோ அப்பொழுதுதான் அடக்கப்படுபவர்களின் விடுதலைக்கான சரியான உபகரணங்களைக் கண்டுபிடித்து செயற்படுவோம் என்பதைக் குறித்துக்கொண்டு இக் கட்டுரையின் விடயத்திற்கு செல்வோம். ஏனனில் இக் கட்டுரை மேற்குறிப்பிட்ட முரண்பாடுகள் பிரச்சனைகள் தொடர்பானதல்ல மாறாக தியானம் அதன் பயன்பாடு மற்றும் நன்மைகள் தொடர்பாக மேலோட்டமாக ஆராய்கின்றது.

கடந்த சில பத்தாண்டுகளாக மேற்குலம் தியானம் தொடர்பான நீண்ட கால குறுகிய கால ஆய்வுகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றது. இதற்காக தமது வாழ்வில் நீண்ட காலம் தியானம் செய்தவர்கள்> குறுகிய காலம் தியானம் செய்தவர்கள்> தியானம் செய்யாதவர்கள் என்பவர்களுக்கிடையே பல்வேறுவிதமான ஆய்வுகளை மேற்கொண்டுவருகின்றது. மேலும் பல்வேறுவகையான தியான முறைகளை பின்பற்றுவேர்களுக்கு இடையிலும் இவ்வாறான பரிசோதனைகளை செய்தும் மற்றும் ஓப்பிட்டும் தமது ஆய்வுகளை முன்னெடுகின்றனர். இதற்காக நவீன தொழிற்நூட்ப உபகரணங்களைப் (உதாரணமாக எம்ஆர்ஐ (fMRI)இ ஈசிஜி(ECG)) பயன்படுத்தியும் செய்துவருகின்றனர். தியானம் தொடர்பான இவ்வ்hறான ஆய்வுகளின் அடிப்படையில் மனிதர்களின் வளர்ச்சிக்கும் மேம்மாட்டிற்கும் ஆனந்தமான மகிழ்வான வாழ்விற்கும் மற்றும் உடல்> உள> மன> ஆன்மீக ஆரோக்கியத்திற்கும் மற்றும் இவற்றுடன் தொடர்புபட்ட நோய்களை தீர்ப்பதிலும் இதன் பங்களிப்பையும் முக்கியத்துவத்தையும் ஆதராங்களுடன் முன்வைக்கின்றனர். இந்த ஆய்வுகள் என்ன கூறுகின்றன என்பதை விபரிப்பதே இக் கட்டுரையின் நோக்கம். புதிய வருடத்தில் இக் கட்டுரை உங்களுக்கு ஒரு புதிய பார்வையையும் தங்களது தனிப்பட்ட உடல்> உள> மன மற்றும் ஆன்மீக வளங்களையும் ஆற்றல்களையும் மேலும் அதிகரிப்பதற்கும் மற்றும் இவை தொடர்பான பிரச்சனைகள் பற்றியும் எவ்வாறான பார்வையை நாம் கொண்டிருக்கலாம் என்பதையும் முன்வைக்கின்றது.

இக் கட்டுரை பிரதானமாக கத்தியா ரூபியா (Katya Rubia) என்பரின் தியானம் தொடர்பான ஆய்வுக் கட்டுரையின் அடிப்படையிலையே எழுதப்படுகின்றது. இவர் இங்கிலாந்திலுள்ள கிங்ஸ் கல்லுரியின் மன நல மருத்துவக் பிரிவின் குழந்தைகள் மற்றும் இளையவர்களுக்கான மன நலப் பிரிவில் பேராசிரியராகப் பணியாற்றுகின்றனர். மேலும் சிலரின் அதரவான ஆய்வுக் கட்டுரைகளும் இங்கு பயன்படுத்தப்படுகின்றது. ஐநாவின் உலக நல அமைப்பினதும் (WHO)

மற்றும் வேறு பல ஆய்வுகளின் (Mathers and Loncar, 2005)இ ஆதராங்களை முன்வைத்து இவர் கூறுகின்றார் 2020 ஆண்டளவில் உலகில் மன சோர்வு> மனநோய்> மன அழுத்தம்> மற்றும் இளையோரின் தற்கொலை வீதம் என பல்வேறு விதமான நோய்கள் அதிகளவில் அதிகரிக்க உள்ளதாக கூறுகின்றார். இதை எவ்வாறு கட்டுப்படுத்துவது அல்லது குணப்படுத்துவது என்பதற்காக தியானம் தொடர்பான தனது ஆய்வை மேற்கொள்கின்றார். ஏனனில் இவ்வாறான நோய்களைத் தீர்ப்பதற்குப் பயன்படுத்தப்படும் ஆங்கில மருந்துகள் பல பக்க விளைவுகளை எதிர் விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்கின்றார். மேலும் இந்த மருந்துகளின் விற்பனை நிறுவனங்கள் தமது ஆதிக்கம் மூலம் இலாபம் ஈட்டுவதை மட்டும் நோக்கமாகக் கொண்டு இந்த மருந்துகளை முக்கியத்துவப்படுத்தி அவற்றின் பாவனையை மனிதர்களுக்கு இன்றியமையாததாக்குகின்றனர். இதற்குமாறாக தியானம் என்பது பக்க மற்றும் எதிர் விளைவுகளை ஏற்படுத்துவதுமில்லை. அதேவேளை இலவசமாக பயன்படுத்தக் கூடியதுமாகும் என்கின்றார். ஆகவே தியானம் தொடர்பாக நமது தேடலை ஆரம்பிப்போம். எதிர்காலத்தில் வரப்போகின்றன மேற்குறிப்பிட்ட பிரச்சனைகள் வரவிடாமல் தடுப்பதற்கு இன்றே அதற்கான தடைகளை உருவாக்க முயற்சிப்போம். எதிர்காலத்தில் மட்டுமல்ல இன்று இலங்கையில் வடக்கு கிழக்கில் குறிப்பாக வன்னியில் கடந்த போரினால் ஏற்கனவே பாதிக்கப்பட்ட> அல்லது உருவாக்கப்பட்ட உடல்> உள> மன பாதிப்புகளை> வடுக்களை> குறைகளைத் தீர்க்க> நீக்க நாம் சமயம் சாராத் தியானப் பயிற்சிகளைப் பயன்படுத்தலாம்;. இவ்வாறு பயன்படுத்துவதற்காக ஆய்வாளர்கள் முன்வைக்கும் விஞ்ஞானரீதியான காரணங்களையும் முடிவுகளையும் அதற்கான ஆதாரங்களையும் கவனிப்போம்.

மேற்குலகின் உளவியல்> பிரக்ஞை (state of consciousness) நிலையை மூன்று அடிப்படைகளாக பிரிக்கின்றது என்கின்றார் காதிய ரூபியா. ஒன்று நித்திரை நிலை: இரண்டாவது கனவு நிலை: மூன்றாவது விழித்திருக்கும் நிலை:. ஆனால் கீழக்கின் தத்துவயியல் அல்லது ஆன்மீக மெய்ஞானம் எனப்படுகின்ற விஞ்ஞானம் நான்கு நிலைகளாகப் பிரிக்கின்றது. இந்த நிலையானது மேற்குறிப்பிட்ட மூன்றுடன் “நான்காவது நிலை” அல்லது உயர்ந்த பிரக்ஞை நிலை என இன்னுமொன்றையும்; குறிப்பிடுகின்றனர் என்கின்றார். அதாவது மனதில் எண்ணங்கள் இல்லாத நிலை (No mind or no thoughts) எனவும் குறிப்பிடலாம் (Rubia, 2009). இந்த நிலை தொடர்பாக மேற்குலகில் ஆழமான புரிதல் இல்லாமையால் தியானத்தின் ஆழமான பகுதிகளை இவர்களால் நீண்டகாலமாக புரியவோ அறியோ முடியவில்லை. நீண்ட காலமாக தியானம் என்பது ஒன்றைக் குறித்து முழுமையாக கவனித்தல் என்பதாகவே புரிதல் இருந்தது. இந்த நிலை விழிப்பு நிலையில் இருந்து பெரிதும் வேறுபட்டதல்ல. இதனால் தியானத்தின் நன்மைகளை கண்டறிவதில் அதிக ஆர்வம் காண்பிக்கவில்லை. ஆனால் இந்த நிலைமைகள் இன்று மாறிக் கொண்டுவருகின்றன.

தியானம் என்பது பல வகைகள் உண்டு. மிகவும் பிரபல்லயமானது ஒரு பொருளை அல்லது ஒளியை தொடர்ந்து கவனிப்பது. அல்லது ரமண மகரிஸியால் உருவாக்கப்பட்ட ஒரு சொல்லை தொடர்ந்து மீண்டும் மீண்டும் கூறும் தியான முறை (Transcendental Meditations (TM). இந்த சொல்லை மந்தரம் எனவும் கூறுவார்கள். மேற்குலகம் யோகாவையும் தியானத்தின் ஒரு பகுதியாக பார்க்கின்றது. இவ்வாறான தியான முறைகள் எல்லாம் மேற்போக்கான அல்லது வியாபார ரீதியாக பிரபல்யமான தியானப் பயிற்சிகள். இதைத்தவிற தியானத்தில் அக்கறையுடனும் ஆழமாகவும் சென்று ஈடுபடுகின்றவர்கள் தமது மூச்சைக் மூக்கின் நுனியில் பிரக்ஞையுடன் கவனிப்பர். இது விப்பாசனா (vipassana) எனவும் குறிப்பர். மற்றது தமது வயிற்றுப்பகுதி எழுந்து இறங்குவதைக் கவனிப்பர். இது இரண்டும் முக்கியமாக பயிற்சிமுறைகள். முதலாவது புத்தரினால் பிரபால்யமாகி அன்றிலிருந்து ஆழந்த ஈடுபாடுடையவர்களால் பயன்படுத்தப்பட்டுவருகின்றது. மற்றவகை ஐப்பான் நாட்டில் அதிகமாக பயன்படுத்தப்பட்டது. ஜப்பான் நாட்டில் பின்பற்றப்படும் இன்னுமொரு முறையான சென் (Zen) முறையும் மேற்குலகில் பிரபல்யமானது. மற்றும் ஜிட்டு கிர்ஸ்ணமூர்த்தியின் தியானம் தொடர்பான கருத்துக்களும் ஆழமான தியானப் பயிற்சி செய்வர்களிடையில் பிரபல்யமானவை. மேற்குறிப்பிட்ட பல்வேறு வகையான கிழக்குலகின் தியான முறைகளை (உதராணமாக யோகா மற்றும் மூச்சுப் பயிற்சி) ஒன்றினைத்து முழுமனம் அல்லது நிறைவான மனம் (Mindfuless Based Stress Reduction-MBSR) என்ற தியான முறை பேராசிரியர் காபாட் சின் (Kabat- Zinn) என்பவரால் உருவாக்கப்பட்டு மேற்கில் அறிமுகப்படுத்தப்பட்டு பல்வேறு வகையான உள மன நோய்களை குணப்படுத்துவதற்குப் பயன்படுத்தப்பட்டுவருகின்றது. இந்த தியான பயிற்சி முறையானது குறிப்பாக புலமைக் கல்விசார் துறையில் பிரபல்யமானதுமட்டுமல்ல ஆய்வுக்காகாகவும் அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றது.

இதைத் தவிர ஓசோ என்பவரால் கிழக்கு மற்றும் மேற்குலகு ஆகிய இரு அறிவுகளையும் பயன்படுத்தி இக்காலத்திற்கு ஏற்றதாக புதிய தியான முறையை உருவாக்கி உள்ளார். இதை active meditation எனக் கூறுவார். இந்த தியான முறை புலமைசார் கல்வித்துறையில் அதிகளவு ஆய்வுக்கு இன்னும் உட்படுத்தப்படவில்லை. இந்த முறை இரு பகுதிகளைக் கொண்டது. முதலாவது பகுதி நமது அடக்கப்பட்ட சகல உணர்வுகள் உணர்ச்சிகளை செயற்கையான செயற்பாட்டினுடாக வெளிப்படுத்துவது. இவ்வாறு முழுமையாக வெளிப்படுத்தப்பட்ட பின் இரண்டாவது பகுதி அமைதியாக இருந்து பிரக்ஞையுடன் நம்முள்ளே கவனிப்பது. இந்த முறையிலுள்ள நன்மை நம் அடக்கப்பட்ட உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பம் கிடைக்கின்றது. இதனால் உள்ளமைதி என்பதும் அது தொடர்பான அனுபவமும் தானாக ஏற்படுகின்றது. கடந்தகால முறைகளுகும் இந்த முறைக்கும் உள்ள வித்தியாசம் என்னவெனில் முதலாவதில் மனிதர்கள் மன அமைதியை ஒன்றைக் கவனிப்பதனுடுhக கட்டாயப்படுத்தி நிர்ப்பந்தமாக உருவாக்கவேண்டும். இது பலருக்க கஸ்டமானதாக இருக்கின்றது. ஏனனில் இவ்வாறு கவனிக்கும் போதுதான் மேலும் பல புதிய எண்ணங்கள் தோன்றி மனிதர்களின் கவனத்தைக் குழப்புகின்றன அல்லது திசைதிருப்புகின்றன. அதை என்ன செய்வது என தெரியாமல் தியானம் பலன் இல்லை அல்லது கஸ்டம் எனக் கூறி பலர் கைவிட்டுவிடுகின்றார்கள். ஆனால் ஓசோவின் முறையுடாக உடல் உள மன அமைதி தானாவே உருவாகின்றமை மட்டுமல்ல தியான நிலையை குறுகிய நேரத்தல் அனுபவிப்பதற்கும் வழிகாட்டுகின்றது. இது மட்டுமின்றி குறிப்பாக இவரது முதாலாவது பகுதி பல உடல்> உள> மன பிரச்சனைகளை தீர்க்க அல்லது புர்pந்துகொள்ள வழி செய்கின்றது. இவ்வாறு உணர்வுகளை உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது மனக் கவலையைக் குறைத்து உடல் உள மற்றும் மன ஆறுதலை தருகின்றது என ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள் (Davidhizar and Bowen, 1992).

கத்தியாக ரூபியா (Katya Rubi) தியானத்தின் நன்மைகள் நான்கு வகையாக பிரிக்கின்றார். ஓன்று உடல் சார்ந்தது. இதில் உடலானது அமைதியாக ஓய்வாக எந்தவிதமான அழுத்தங்கள் இல்லாது இருக்கின்ற நிலை (physical level). இரண்டாவது மனம் எண்ணங்கள் சிந்தனை சார்ந்த நிலை. அதாவது எண்ணங்களை ஒருமுகப்படுத்தும் ஆற்றல், சுய கட்டுப்பாடும் கண்காணிப்பும், மற்றும் உள் வெளி செயற்பாடுகளை ஆரோக்கியமான ஆற்றலுடன் எதிர்கொள்ளல் அல்லது முன்னெடுப்பது போன்றவை (cognitive level). மூன்றாவது உணர்ச்சிகள் சார்ந்த நிலை. இதில் எதிர் மறை உண்ச்சிகளை கடந்து நேர் மறை உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் தன்மை உருவாக்கின்ற நிலை (emotional level). நான்காவது உளவியல் சார்ந்தது (psychological level). இது ஒரு மனிதரது தன்மையை (personality) நிர்ணையிக்கின்றது. அதாவது ஒருவரது உடல் உள மன சம நிலையைப் பேண உதவுகின்றது என பல ஆய்வாளர்களின் ஆய்வுகளை ஆதாரம் காண்பித்துக் கூறுகின்றனர் (Rubia, 2009).

தியானம் செய்பவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பல்வேறுவிதமான ஆய்வுகிளின்படி பல முடிவுகளுக்கு மேற்குலகின் விஞ்ஞான ஆய்வாளர்கள் வந்துள்ளனர். இந்த ஆய்வுகள் வெறும் தியானம் செய்பவர்களின் பேச்சு மற்றும் எழுத்து மூல தரவுகளிலிருந்து மட்டும் பெறப்பட்டதல்ல. மாறக அவர்களது நாளாந்த செயற்பாடுகள் பழக்கவழக்கங்களை நீண்ட காலம் கண்காணித்தும் மற்றும் இன்றைய நவீன உபகரணங்கள் (எம்ஆர்ஐ (fMRI)> ஈசிஜி(ECG)) மூலம் அவர்களது மூளை> உடல்> மூச்சு> மற்றும் இவற்றின் செயற்பாடுகள் என்பவற்றில் ஏற்படும் மாற்றங்களையும் அவை தரும் தரவுகளையும் கொண்டே திர்மானிக்கப்பட்டன. இந்த ஆய்வுகளினடிப்படையில் தியானம் செய்பவர்களது மூளையில் குறைவான எண்ணங்களே இருக்கின்றது என்றும் ஆகவே மனக்குழப்பங்கள் இவர்களுக்கு குறைவாக இருப்பதனால் மகிழ்ச்சியானவர்களாக இருக்கின்றார்கள் எனவும் கூறுகின்றனர். (Rubia, 2009). இதை அறிவதற்கான மூளையில் செய்யப்பட்ட ஆய்வின்படி எண்ணங்கள் சிந்தனைகள் என்பவற்றின் செயற்பாடுகளை அறியக்கூடிய மூளையின் முன்பகுதியில் குறைந்தளவிலான செயற்பாடுகள் தியான நிலையின் போது காணப்படுகின்றன என்பது கண்டறியப்பட்டது. இதனால்தான் தியானம் செய்பவர்களது மனம் அமைதியடைகின்றது என்கின்றனர். மேலும் ஒரு ஆய்வின்படி தியானம் செய்பவர்களின் மூளையின் இடது பகுதியின் செய்ற்பாடுகள் அதிகரித்தும் வலது பகுதி செயற்பாடுகள் குறைந்தும் காணப்படுகின்றன. ஆகவே நேர் மறையான உணர்வுகள் உணர்ச்சிகள் மற்றும் கற்பனைத் திறன்களும் படைப்பாற்றல்களும் தியானம் செய்பவர்களிடம் அல்லது மனம் ஒன்றித்தோ கடந்தோ செய்ற்படுகின்றவர்களிடம் அதிகமாக வெளிப்படுகின்றது. ஏனனில் முளையின் இடது பகுதி நேர்மறையான உணர்ச்சிகளுடனும் மற்றும் தர்க்கத்திற்கு அப்பாற்பட்ட எண்ணங்களுடனும் வலது பகுதி எதிர் மறையான உணர்ச்சிகளுடனும் மற்றும் தர்க்கம் தொடர்பான எண்ணங்களுடனும் தொடர்பு கொண்டுள்ளதே காரணமாகும். இதேபோல் தியானம் செய்பவர்கள் குறிப்பிட்ட விடயத்தில் முழுமையான கவனம் செலுத்துவதற்கும் ஈடுபடுவதற்கும் குறிப்பாக கல்வி கற்பவர்கள் மற்றும் வேலையில் ஈடுபடுகின்றவர்களின் செயற்பாடுகள் ஆற்றலுடன் வெளிப்படுவதற்கும் நேர்மறை விளைவுகளைத் தருவதற்கும் மூளையில் ஏற்படும் மாற்றங்களே காரணம் எனக் கூறுகின்றனர். (Rubia, 2009).

மேலும்; தியானம் செய்பவர்கள் இளமையாக தோற்றம் தருவதற்கும் காரணம் தியானம் செய்வதால் மூளையில் சுரக்கின்ற சில ஹோமோன்கள் காரணமாக இருக்கின்றன எனவும்; கூறுகின்றனர். இத்துடன் மனச் சோர்வு மன அழுத்தம் போன்றன உருவாவதைக் கட்டுப்படுத்துவதற்கான றோமோன்களும் சுரக்கின்ற காரணத்தினால் மனச் சோர்வு மன அழுத்தம் இன்றி மகிழ்வாகவும் ஆனந்தமாகவும் தியானம் செய்கின்றவர்கள் வாழ்கின்றனர் என்கிறார்கள்.

இறுதியாக நீண்ட காலம் தொடர்ச்சியாக தியான பயிற்சி செய்பவர்களது வாழ்கை முறைகளும் அவர்களது தனி மனித தன்மைகளும் மாறுவதுடன் அதிக உடல் உள நலத்துடனும் வாழ்கின்றனர் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இவ்வாறன ஆய்வுகளின் போது கண்டறியப்பட்ட ஒரு விடயம்> நீண்ட கால தியானப் பயிற்சியில் ஈடுபடுகின்றவர்கள் கடவுள் நம்பிக்கையற்றவர்களாக இருக்கின்றனர் என கூறுகின்றனர்.

சமூக மாற்றத்தில் அக்கறை இருப்பவர்கள் தமது நோக்கத்திற்காக தியானத்தையும் பயன்படுத்தலாம். ஏனனில் தியானம் தனிமனித மாற்றத்திற்கு வளர்ச்சிக்கும் அடிப்படையாகவும் நன்மையளிப்பதாகவும் உள்ளது. இன்றைய சமூகத்தின் பிரதான ஆதிக்க செயற்பாடுகளும் சிந்தனைகளும் ஆண் வழிப்பட்டவையும் மற்றும் தர்க்க அடிப்படையிலானவையும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இவ்வாறன தர்க்க சிந்தனைக்கு மூளையின் வலப் பகுதியே காரணமாக இருக்கின்றது. குறிப்பாக ஆண்களின் வலப்பகுதியே அவர்களது சிந்தனைக்கும் செயற்பாடுகளுக்கும் அதிக செயற்திறன் கொண்டு இயங்குகின்றது. ஆனால் தியானம் செய்கின்ற ஆண்களின் மூளையின் இரு அதாவது வலது மற்றும் இடது இரு பகுதிகள் துடிப்புடன் செயற்படுவது கண்டறியப்பட்டுள்ளது (Shao & Skarlicki, 2009). இவ்வாறான மூளையின் செயற்பாடு ஆண்களை தர்க்கத்திற்கு அப்பாற்பட்டும் சிந்திக்கவும் செயற்படவும் வைப்பதுமட்டுமல்ல அவர்களது படைப்பாற்றலையும் வினைத்திறனையும் அதிகரிக்கின்றது. பெண்களைப் பொருத்தவரை பொதுவாக முளையின் இரு பகுதிகளும் செயற்திறன் கொண்டவையாக இயற்கையிலையே அமைந்துள்ளன. இருப்பினும் தியானப் பயிற்சி செய்கின்ற பெண்களின் படைப்பாற்றல் செயற்திறனாற்றல் என்பன தியானப் பயிற்சி செய்யாத பெண்களினதைவிட அதிகமானதாக இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. ஆகவே தியானப் பயிற்சியின் மூலம் நேர்மறையான நன்மைகள் அனைவருக்கும் ஏற்படுகின்றது என்பது உறுதிப்படுத்தப்படுகின்றது.

சமூகமாற்றம் என்ற நோக்கத்திற்காக செயற்பட விரும்புகின்றவர்கள் தமது சுய வளர்ச்சிக்கும் மாற்றத்திற்கும் மற்றும் தமது படைப்பாற்றல் செயற்திறன் என்பவற்றை ஆரோக்கியமான வழியிலும் நேர்மறைத் தன்மையுடனும் குறிப்பாக பிரக்ஞையுடன் வெளிக்கொண்டு வருவதற்கும் தியானப் பயிற்சி என்பது முக்கியமானது என்றால் மிகையல்ல. ஏனனில் எந்தளவிற்கு சமூக கட்டமைப்பு மற்றும் அதன் ஆதிக்க சிந்தனைகளிலும் நிறுவனங்களிலும் மாற்றங்கள் எற்படுத்துவது இன்றியமையாததோ அதேயளவு தனிமனித மாற்றமும் வளர்ச்சியும் இன்றியமையாததாகும். ஆனால் சமூகமாற்றத்திற்காக செயற்படுகின்றவர்கள் குறிப்பாக இலங்கையின் வடக்கு கிழக்கில் சமூகமாற்றத்திற்காக செயற்படுகின்றவர்கள் முதலில் தம்மில் மாறுதலையும் வளர்ச்சியையும் ஏற்படுத்துவதற்காக செயற்படும் அதேவேளை போரினால் உடல் உள மன ரீதியாகப் பாதிக்கப்பட்டு இருக்கின்ற மனிதர்களின் உடல் உள மன பலத்தையும் ஆரோக்கியத்தையும் வளர்ச்சியையும் அவர்களிடம் ஏற்படுவதற்காக செயற்படவேண்டியது அவசியமானதாகும். ஏனினில் ஒரு ஆரோக்கியமான சமூகமே> மனிதக் கூட்டமே> ஆரோக்கியமான புதிய சமுதாயத்தைக் கட்டிஎழுப்பக் கூடியவர்களாக இருப்பார்கள் என்பதை நாம் ஒவ்வொரு கணமும் நினைவில் இருந்தவேண்டியவர்களாக உள்ளோம். இதற்கு நம்மில் பிரக்ஞையை வளர்க்கும் தியானப் பயிற்சியில் ஈடுபடுவது அவசியமானதாகும்.

இறுதியாக இக் கட்டுரை தியானம் தொடர்பான மேற்குலகின் பார்வையின் அடிப்படையில் முன்வைக்கப்பட்ட ஒரு அறிமுகம் மட்டுமே. தியானம் தொடர்பாக இனிவரும் அடுத்த தொடர் கட்டுரைகளில் தியானம் எவ்வாறு மனித உடல் உள மன ஆன்மீக ரீதியில் ஏற்படுத்தும் தாக்கங்கள் மற்றும் விளைவுகள் தொடர்பாக விரிவாக எழுதப்படும். குறிப்பாக தியானம் என்பது பிரக்ஞை> விழிப்புணர்வு> படைப்பாற்றல்> கற்பனை> மன அழுத்தம்> மனச் சோர்வு> உடல் நோக்கள்> புற்றுநோய்> உடல் உள மன ஆறுதல்கள்> மற்றும் மரணம்> என ஒவ்வொன்றின் மீது எவ்வாறான தாக்கங்களை ஏற்படுத்தி விளைவுகளை உருவாக்கின்றது எனப் பார்க்கப்படும். மேலும் சமூக மாற்றத்திற்கான பாதையில தியானத்தின் முக்கியத்தும் தியானமும் பெண்ணியமும் தியானமும் உளவியலும் தியானமும் மனமும் என பல்வேறு பகுதிகளாகவும் இனிவரும் கட்டுரைகளில் ஆராயப்படும். இம் முறை சிரிக்கும் தியானத்தின் நன்மைகள் என்ன அதனாhல் ஏற்படும் மாற்றங்கள் விளைவுகள் என்ன என்பது பார்க்கப்படுகின்றது.

இந்த இரண்டு கட்டுரைகளுடன் சிரிக்கும் தியானமும் (வாசகர்களுக்கான) தங்களுக்கான எனது புத்தாண்டு பரிசு.

தியானம்! நம் ஒவ்வொருவரினதும் வாழ்வின் ஒரு பகுதியாக மாறும் காலம் விரைவில் வரவேண்டும்.

தியானம் தொடர்பான கேள்விகளுக்கும் வகுப்புகளுக்கும் பயிற்சிப் பட்டறைகளுக்கும் தொடர்பு கொள்ளுங்கள்.

மீராபாரதி

31.12.2010

Rubia, K. (2009). The neurobiology of Meditation and its clinical effectiveness in psychiatric

disorders. Biological Psychology, 82(1)–11

Davidhizar, R. and Bowen, M. (1992). The Dynamics of Laughter. Archives of Psychiatric

Nursing, 6(2) 132-137

Osho (2010). The Psychology of the Esoteric, #4. http://www.osho.com/Main.cfm?Area=Magazine&Language=English

Somasundaram, Daya. (1994). தன்னாத்மாவைத் தேடி அலையும் மனித[ர்]” http://noolaham.net/project/26/2559/2559.pdf

Shao, R. & Skarlicki, D. P. (2009). The Role of Mindfulness in Predicting Individual

Performance. Canadian Journal of Behavioural Science , 41(4), 195–201

Smith, J.C. (2005). Relaxation, Meditation, & Mindfulness: A Mental Health Practitioner’s

Guide to New and Traditional.

Toneatto, T. & Nguyen, L. (2007). Does Mindfulness Meditation Improve Anxiety and Mood

Symptoms? A Review of the controlled research. Canadian Journal of Psychiatry; 52(4),

260.

Weiss, M., Nordlie, J.W., Siegel, E.P.(2005). Mindfulness-Based Stress Reduction as an

Adjunct to Outpatient Psychotherapy. Psychotherapy and Psychosomatics, 74(2). 108

Dacher Keltner & George A. Bonanno A Study of Laughter and Dissociation: Distinct Correlates of Laughter

and Smiling During Bereavement. Journal of Personality and Social Psychology, 1997, Vol. 73, No, 4, 687-702

2 comments:

Unknown said...

How to practice pragya yoga or prgya dhyna

Unknown said...

Myself wish to practice