Sunday, September 5, 2010

ஆரசியல் தோல்வியா? இராணுவத் தோல்வியா?

ஆரசியல் தோல்வியா? இராணுவத் தோல்வியா?



இலங்கை வாழ் மனிதர்கள் குறிப்பாக வடக்கு கிழக்கில் வாழும்(?) மனிதர்கள் முன் மிக முக்கியமான ஒரு கேள்வி ஒன்று இன்று எழுகின்றது என்றால் சந்தேகமில்லை. அல்லது அவ்வாறு எழ வேண்டும். இன்றைய நமது தேவை இராணுவ வெற்றியா? அல்லது அரசியல் தோல்வியா? ஏன்பதே அக் கேள்வி. இதற்கான பதில் என்ன?



புலிகள் இராணுவரீதியாக ;தோற்கடிக்கப்படவேண்டும்! என்பதில் மனித உரிமையாளர்களுக்கும் ஐனநாயகவாதிகளுக்கும் புலி எதிர்ப்பாளர்களுக்கும் அரச ஆதரவாளர்களுக்கும் மனிதாபிமானிகளுக்கும் கருத்துவேறுபாடோ மனதில் சந்தேகமோ இல்லை. ஏனனில் புலிகளின் தலைமைத்துவத்தின் ஐனநாயகமின்மை, கருத்து சுதந்திரம் இன்மை, சிறுவர்களை வன்முறையில் ஈடுபடுத்துவது, பல அமைப்பு கட்சி அரசியலுக்கு எதிராக இருப்பது, மாற்று அரசயலாளர்களை கொல்வது, மற்றும் தடை செய்வது, தன்னிச்சையாக பொது அரசியலில் ஈடுபடுவது, மற்றும் அரசியல் நோக்கமோ திட்டமோ இல்லாமை, நிலங்களையும் சுழலையும் மாசுபடுத்துவதும் வீணாக்குவதுமான செயல்களில் ஈடுபடுகின்றமை, என்பவை புலிகளின் தலைமை ஆகக் குறைந்தது இராணுவ ரீதியாகவாவது தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதற்குப் இவை போதுமான காரணங்களாகும். இவ்வாறான ஆரோக்கியமற்ற செயல்களில் ஈடுபடும் புலி;களினால் ஒரு அரசியல் தீர்வு கிடைக்கப்போவதில்லை என்பதில் சந்தேகமே இல்லை. தப்பித் தவறி அரசியல் தீர்வு ஒன்று இவர்களினால் உருவாகுமேயானால் அது நிச்சயமான ஒரு சமூக மனித விடுதலைக்கு வழிவகுக்காது என்பது நிச்சயமான ஒன்று. மேலும் இவர்களது ஆயுத பலத்;தினால் ஆரோக்கியமான சுழல் தமிழ் பேசும் மனிதர்கள் வாழும் இடங்களில் மட்டுமல்ல இலங்கையிலும் தென்இந்தியாவிலும் மற்றும் ஒரளவு புலம் பெயர் சுழலிலும் இருக்கப்போதில்லை. ஆகவே இவர்களது இராணுவப்பலம் அழிக்கப்படவேண்டும் என்பதை ஏற்பதில் எந்தவிதமான தயக்கமும் இல்லை. மேலும் இவர்களது இராணுவ அரசியல் வெற்றி எதிர்கால மனிதர்களுக்கு (குறிப்பாக சிறுவர்கள் பெண்கள் தொழிலாளர்கள் சதியால் அடக்கப்பட்டவர்கள்) எந்தவிதமான விடுதலையையும் பெற்றுத்தரப்போவதில்லை. ஆகவே இவர்களது இராணுவபலம் அழிக்கப்படவேண்டும் என்பதில் ஐயமில்லை. ஆனால் இதை யார் செய்வது என்பது முக்கியமானது? இலங்கை இராணுவமா???



இன்று இலங்கை இராணுவம் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்களுக்கு முன்னேறிச் செல்வது புலி எதிர்ப்பாளர்களுக்கும் அரசாங்க ஆதரவாளர்களுக்கும் மகிழ்ச்சியான செய்தியாக இருக்கலாம். ஏனனில் அந்தளவிற்கு புலிகளின் மிலேச்சத்தனமான செயல்களால் இவர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். இந்தப் ;பாதிப்பைக் காரணங்காட்டி இராணுவத்திற்கு ஆதரவளிப்பதோ அல்லது அவர்களது வெற்றியில் மகிழ்வதோ சரியான நிலைப்பாடாக இருக்கமுடியாது என்பது புகுத்றிவாளர்களுக்கும் ஆழ்ந்து சிந்திப்பவர்களுக்கும் புர்pயும் என்பதில் சந்தேகமில்லை. ஏனனில் தமிழ் பேசும் மனிதர்கள் வாழும் பிரதேசங்கிளில் புலிகள் உட்பட பல்வேறு ஆயுதக் குழுக்கள் உருவாகுவதற்று காரணமானவர்களே இந்த இலங்கை இராணுவத்தை வழிநடாத்தும் சிறிலங்கா அரசே என்றால் மிகையல்ல. எந்தக் காரணங்களுக்காக மனிதர்கள் புலிகளை; எதிர்க்கின்றார்களோ அதே காரணங்களுக்காகவும் இலங்கை ;அரசையும் அதன் இராணுவத்தையும் அவர்கள் எதிர்க்கவேண்டும். மேலும் புலிகளைப் போல அல்லது அற்கும் மேலாக சிறிலங்கா அரசு தமிழ் பேசும் மனிதர்களின் வாழும் உரிமையையும் மற்றும் அடிப்படை ஐனநாயக உரிமைகளையும் மறுப்பவர்களாக இருக்கின்றனர். புலிகளுக்கு மாற்றாக இவர்களை ஆதரிப்பதும் இவர்களது வெற்றியில் மகிழ்வதும் புலி எதிர்ப்பாளர்களது முரண்பாடான சிந்தனையையும் இயலாமையையுமே வெளிப்படுத்துகின்றது என்பது வெளிப்டையான ஒரு உண்மை. மேலும்; புலி எதிர்ப்பாளர்கள் சிலர் அல்லது பலர் புலிகளிடமிருந்து எந்தவகையிலும வேறுபடவில்லை. அவர்களதும் தாம் ஆதிக்கம் செலுத்தும் பிரதேசங்களிலும் புலிகளைப் போன்றே மனித உரிமை மீறல் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர் என்பது நாளாந்தம் நிறுபிக்கப்படுகின்ற ஒரு உண்மை.



புலிகளை எதிர்ப்பது என்பது புலிகளின் தலைமையை எதிர்ப்பது என்பதாகவே இருக்கவேண்டும். மாறாக ;புலிகளின் அமைப்புக்குள் புரிந்தோ புர்pயாமலோ அல்லது நிர்ப்பந்தங்களாலோ அல்லது உணர்சியினாலோ அல்லது சுழ்லையினாலோ இணைந்திருக்கும் அங்கத்தவர்கள் குறிப்பாக சிறுவர் சுறுமியர் மற்றும் பெண்கள் மற்றும் சக மனிதர்களை; எதிர்ப்பதாக, அவர்களளை அநியாயமாக அழிப்பதாக இருக்கக் கூடாது. புலிகளின் தலைமை மேற்கொள்ளும் தவறுகளுக்கு இவர்கள் பொறுப்பல்ல. மேலும் சுழ்நிலைக் கைதிகளாக புலிகளில் இணைந்திருக்கும் சிறுவர் சிறுமியரையும் ஆண்களையும் பெண்களையும் மற்றும் தமிழ் பேசும் மனிதர்களையும் கொன்று அழிப்பதாகவே இராணுவத்தின் புலி அழிப்பு நடவடிக்கைகள் இருக்கும். இவ்வாறான நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பது என்பது புலிகளுக்கு ;ஆதரவளிப்பதைபோன்ற ஒரு ஆரோக்கியமற்ற செயற்பாடே. ஏனனில் இராணுவத்திற்கும் இலங்கை அரசுக்கும் வழங்கப்படும் ஆதரவு என்பது எந்தவகையிலும் பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வை விளைவாகத் தரப்போவதில்லை. இதேபோன்று புலிகளுக்கு ஆதரவளிப்பது என்பதும் பிரச்சனைக்கு தீர்வு ஒன்றைத்தரப்போவதில்லை. அப்படி எனின் தீர்வுதான் என்ன?



புலிகளின் இதுகாலவரையான வன்முறை செயற்பாடுகள் எப்படி இன முரண்பாட்டிற்கான அடக்குமுறையிலிருந்து விடுபடுவதற்கான தீர்வை தருவதற்கு பெறுவதற்கு உதவவில்லை. ஆகக் குறைந்தது பரந்துபட்ட உலக மக்களனின் ஆதரவைக் கூட பெற முடியாது உள்ளது. இதற்கு காரணம் இவர்களது அரசியலற்ற வெற்று இராணுவ மற்றும் மனிதாபிமானமற்ற வன்முறை நடவடிக்கைகளே என்றால் மிகையல்ல. இதன் மறுதலையாக போன்றது தான் இலங்கை இராணுவத்தின் புலிகள் மீதான இராணுவ வெற்றியானது தமிழ் பேசும் மனிதர்களின் அரசியல் அபிலாசைகளையும் அவர்களது அடிப்படை உரிமைகளுக்காக குரலையும் நசுக்கி குழிதோண்டிப் புதைப்பதாகவே இந்த நடவடிக்கை இருக்கும்.; அவ்வாறு நடைபெறாது எனக் கூறுவதற்கு எந்தவிதமான உத்தரவாதமும் இல்லை. இதன் அர்த்தம் புலிகள் இல்லாது பிரச்சனை தீர்க்கமுடியாது என்பதல்ல. மாறாக இலங்கை அரசுக்கு இன ;முரண்பாட்டுக்கு தீர்வு காண்பதில் அக்கறை இல்லாது இருப்பது மட்டுமல்;ல தெளிவும் இல்லாது இருப்பது கவனிக்கத்தக்கது. ஆகக்குறைந்தது பொதுப்புத்தி கருத்தியல் கூட இம் முரண்பாடு தொடர்பாக இதுவரையும் இல்லாதிருப்பது கவலைக்கிடமானதே.



புலிகளின் அரசியலும் ஆயுத செயற்பாடுகளும் முரண்பாடனவைகள்hக இருக்கின்றன. பூநகரியை இராணுவம் பிடித்தவுடன் பிரபாகரன் இது தந்திரோபாய பின்வாங்களே என்றும் மேலும் மூன்று மாத காலத்தில் மீண்டும் தாக்குவோம் என்றும் கூறியிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அதேவேளை இச் செய்தி வெளிருவவதற்கு சில நாட்களுக்கு முன்பு அரசியல பொறுப்பாளர் நடேசன் அவர்கள பேச்சுவார்ததைக்கு தாம் தயார் எனக ;கூறியிருப்பதாக செய்திகள் தெரிவித்திருந்தன. புலிகளின் உண்மையான நிலைப்பாடு என்ன என்பது அவர்களுக்கே தெளிவில்லாமல் இருக்கின்றது. அல்லது சந்தர்ப்பங்களுக்கு ஏற்றவாறு கதைத்து மனிதர்களை குறிப்பாக தமிழ் பேசும் மனிதர்களை தொடர்ந்தும மந்தைகளாக ஏமாற்றியே வருகின்றனர். ஆக தொடர்ந்தும் சிறுவர்களையும் பெண்களையும் மற்றும் சக மனிதர்களையும் அவர்களது உயிரையும் உழைப்பையும் பலி கொடுப்பதே அவர்களது கொள்கையாக இருக்கப்போகின்றது. தமிழீழம் என்பது யதார்த்தமற்றதாயினும் அத தமிழ் பேசும் மனிதர்களினது கனவாகவும் அந் நிலம் அவர்களது உடல்களின் புதை நிலங்களாகவும் புலிகளின் அதிகாரத்திற்கான அரசியல் ஆயதமாகவும் மட்டுமே இனிவரும் காலங்களில் இருக்கப்போகின்றது. இன்று புலிகள் பேச்சுவார்த்தைக்கு தயார் என்பது தமது இயலாமையின் வெளிப்பாடே. ஆல்லது மீண்டும் தம்மை பலப்படுத்துவதற்கான ஒரு தந்திரோபாய செயற்பாடே என்பது வெளிப்படையான ஒரு விடயம்.



ஆகவே பிரபாகரன ;அவர்களே! மூன்று மாத காலத்தின் பின் தங்களது தன்முனைப்புக்கு தீணிபோடும் மேலும் இளம் மனிதர்களை பகடைக்காயாக்கி பலிகொடுக்கும் இராணுவ நடவடிக்கையை முன்னெடுக்காது பிரச்சனையை தீர்ப்பதற்கான காத்திரமான ஆரோக்கியமான வன்முறையற்ற செயற்பாடுகளை முன்னெடுங்கள் என பாதிக்கப்படும் மனிதர்கள் சார்பாக கேட்டுக்கொள்கின்றேன்.



மேலும் புலிகள் இராணுவ பலம் கொண்டிருந்த காலங்களில் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று கூறியிருந்தால் அது ;வரவேற்க்க கூடிய ஆரோக்கியமான விடயமான கவனத்தில் கொள்ளப்பட்டிருக்கும். இருப்பினும் இரு தரப்பும் உடனடியாக போர் நிறுத்தி பேச்சுhவார்த்தைக்கு முன்வருவது தமிழ் பேசும் மனிதர்களைப் பொறுத்தவரை மகிழ்வான விடயமே. ஏனனில் அமைதியான ஒரு சுழலிலையே சமாதானம தொடர்பாக உரையாடலாம்.



இந்த இடத்தில் இலங்கையில் வாழும் தமிழ் சிங்கள மொழி பேசும் அமைப்பு சாரா பொது மனிதர்களினதும் புலம் பெயர்ந்து வாழும் தமிழ்பேசும் மனிதர்களினதும் பங்களிப்பு முக்கியத்துவப்படுகின்றது. இவர்கள் எந்தப் பக்கமும் சாராது சகல மனிதர்களினதும் அடிப்படை உரிமைகளுக்காக ஒன்றாக குரல் கொடுக்கவேண்டிய தேவை இன்று காணப்படுகின்றது. இவ்வாறான ஒரு குரலின் இன்மை, அதற்கான ஒரு இடைவெளி நீண்டகாலமாக இருந்து வருகின்றது. இன்று அக் குரல் கேட்கப்படுவதற்கான, அந்த இடைவெளி நிறப்பப்படுவதற்கான காலம் உருவாகிவருகின்றது அல்லது புதிய மூன்றாம் தரப்பு ஒன்று வெளிவரவேண்டியதற்கான ;காலம் நம்முன் வந்துகொண்டிருக்கின்றது என்பது மறுப்பதற்கில்லை. இது தமிழ் சிங்களம் பேசும் மனிதர்களால் கவனத்தில் எடுக்கப்படாமல் இன்னும் இருப்பது கவலைக்குரிய ஒரு விடயமே. ஏனனில் குறிப்பாக புலம் பெயர் தமிழ் பேசும் மனிதர்களின் இன்றையை செயற்பாடுகள் அவ்வாறனவையாக இருக்கின்றன.



புலம் பெயர்ந்து வாழும் மனிதர்கள், இரு ;தரப்பும் போரை நிறுத்துக்கள்! பிரச்சனைக்கு தீர்வை முன்வையுங்கள்! போன்ற கோரிக்கைகளை முன்வைக்காது புலிகளுக்கு :ஆதரவாகவும் அவர்களாலும் இராணுவத்திhலும் பாதிக்கப்பட்டிருக்கும் மனிதர்களுக்கு உதவுவது என்றடிப்படையில் நிதி சேகரிப்பதும் பொருட்கள் சேகரிப்பதுமான வழங்காமான போர்க்கால செயற்பாடுகளையே முன்னெடுக்கின்றனர். இது எந்தவகையிலு; இலங்கையில் குறிப்பாக வடக்கு கிழக்கில் மேலும் குறிப்பாக புலிகளிடமும் இராணுவத்திடமும் மற்றும் ஆயுதக் குழுக்களிடமும் அகப்பட்டு சிறையுண்டு வாழும் மனிதர்களின் பிரச்சனைகளை தீர்க்கப் போவதில்லை. மாறாக இவ்வாறான செயற்பாடுகளை; முன்னெடுக்கும் புலம் பெயர் நாடுகளில் வாழும் தனிநபர்களின் குறிப்பிட் நாட்டிலான தமது அரசியல் அபிலாசைகளையும் அவர்களுக்கான சமூக அந்தஸ்தையுமே பெற்றுக் கொடுக்கும் சந்தர்ப்பவாத பிழைப்புவாத செயற்பாடுகளே. இதேபோன்று புலி எதிர்ப்பாளர்களது அரசாங்க ஆதரவு செயற்பாடுகள் இலங்கை அரசாங்கத்தைத் தவிர யாருக்கும் நன்மை அளிக்கப்போவதில்லை. இது அவர்களது இயலாமையிலிருந்து உருவாகின்ற சந்தர்ப்பவாத பிழைப்புவாத செயற்பாடுகள். ஆடிப்படையில் இருவரும் அழிவுக்கும் வன்முறைக்குமே ஆதரவளிக்கின்றனர். அப்படி எனின் என்னதான் செய்யவேண்டும்?



இலங்கை வாழ் மனிதர்களினதும் மற்றும் குறிப்பாக வடக்கு கிழக்கு வாழ் மனிதர்களினதும் நாளாந்த வாழ்வுக்கான உத்தரவாதத்தை அளிக்கும் சுழலை உருவாக்குவதற்கு புலம் பெயர்ந்து வாழும் இலங்கை மனிதர்கள் ஒன்றாக செயற்படவேண்டிய தருணம் இது. மேலும் ஒவ்வொரு மனிதர்களினதும் அடிப்படை உரிமைகளை மதிக்கும் செயற்பாடுகளை அணைத்து தரப்பினரும் முன்னெடுக்க நிர்ப்பந்திக்குமு; செயற்பாடுகளையும் குறிப்பாக யுத்தத்தையும் வன்முறை செயற்பாடுகளையும் நிறுத்தி அனைவரும் பேச்சுவார்த்தையில் பங்குபற்றுவதை வலியுறுத்தவேண்டும். இதுவே புலம் பெயர்ந்து வாழும் மனிதர்களின் முன் உள்ள பொறுப்பான செயற்பாடு என்றால் மிகையல்ல.



இலங்கையின் வடக்கு கிழக்கில் மட்டுமல்ல இதைவிட மோசமாக உலகின் பல பாகங்களில் ஆயுதக ;குழுக்களாலும் அடக்குமுறை அரசுகளாலும் மனிதர்கள் படும் இன்னல்கள பல பல. சொற்களில் எழுதமுடியாதவை. ஐPரணிக்க முடியாத வாழ்வை இம் மனிதர்கள் வாழ்கின்றனர்கள். இம் மனிதர்களின் விடிவுக்கு வழி சகலவிதமான ஆயுத செயற்பாடுகளுக்கும் முற்றுப்முள்ளி வைப்பதற்று உலகளாவிய ரீதியில் செயற்படுவதே. ஏனனில் இன்று உலகின் முக்கியமான இலாபகரமான வியாபாரம் என்றால் அது ஆயுத விற்பனையே. இந்த ஆயுதங்களே மனிதர்களைக் கொல்வதற்கும் அடக்குவதற்கும பயன்படுத்தப்படுன்றது. இந்த ஆயுதங்களை வாங்குவதற்கும் மனிதர்களைக் கொல்வதற்கும் அடக்குவதற்குமே புலம் பெயர் நாடுகளில் வாழும் பல மனிதர்கள் தம் உழைப்பைக் கொடுத்து பணம் வழங்குகின்றனர். இது கொள்கைரீதியான பங்களிப்பு என்பதை விட புலம் பெயர்ந்து சுகமாக பாதுகாப்பாக வாழும் மனிதர்களின் குற்ற உணர்வின் நிமித்தம் ஏற்படும் ஒரு கடமை உணர்வே இது. அதாவது குற்றஉணர்வினால் முன்னெடுக்கப்படும் ஒரு பொறுப்பற்ற செயல்.



ஆகவே புலம் பெயர்ந்து வாழும் மனிதர்கள் தம் கொள்கைகளுக்கு அப்பாற்பட்டு பொறுப்புடன் செய்யவேண்டியது காலம் இது. ஆவர்கள் செய்யவேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்று தான்.

சுகல தரப்புகளையும் யுத்தததையும் வன்முறை செயற்பாடுகைளயும் நிறுத்தி பேச்சுவார்த்தையில் பங்குபற்றுமாறு நிர்ப்பந்திப்பது.
இடைக்கால தீர்வு ஒன்றை உருவாக்கி முழுமையான தீர்வுக்காக தொடர்ந்தும் செயற்படக் கோருவது.
சுகல மனிதர்களதும் அடிப்படை வாழும் உரிமைகளை மதிக்கக் கோருவது.
குறிப்பாக எழுத்து பேச்சு சுதந்திரங்களை மதிக்க கோருவது.
சிறுவர் சிறுமியரை ஆயுதக் காலாசாரத்தில் இருந்து விடுவித்து சிறந்த கல்வியையும் வாழ்வையும் வழங்க நிர்ப்பந்திப்பது.
புல கருத்துள்ளவர்கள் அரசியலில் பங்குபற்றுவதற்கும் ஐனநாயக வழியில் செயற்படுவதற்குமான சூழலை உருவாக்க கோருவது.
மனிதர்களின் புதைகுழிகளில் கொலைக் களங்களிலும் உருவாகும் தமிழீழம் யாருக்கும் தேவையில்லை! அதானல் பயனுமில்லை.
தீர்வை முன்வைக்காத இலங்கை அரசின் இராணுவ நடவடிக்கை எந்தப் பயனுமற்ற ஆரோக்கியமற்ற காத்திரமற்ற ஒரு செயற்பாடு.
மனிதர்களிடம் வன்மத்தையும் வன்முறையையும் பகைமையையும் உருவாக்கும் இராணுவ வெற்றிகள் அல்லது தோல்விகள் யாருக்கும் வேண்டாம். இது பயனற்றது.
அனைவருக்கும் நன்மையளிக்கும் அரசியல் வெற்றியே அனைவரும் விரும்புவது. இதுவே ஆரோக்கியமானதும் மனித வளர்ச்சிக்கும் வாழ்வுக்கும் பங்களிப்பதாகும்.




புலம் பெயர்ந்த மனிதர்களின் இவ்வாறான கோரிக்கைகளை முன்வைக்கும் ஒரு செயற்பாடே வடக்கு கிழக்கில் மட்டுமல்ல இலங்கையிலும் அமைதியான சமாதானமான ஒரு சூழலை வாழ்வை தோற்றுவிக்கும். மேலும் பிற உலக நாடுகளுக்கும் முன்னுதாரணமாக அமையும்.

உலகத்திலிருந்து ஆயுதக் காலாசாரத்தையும் வன்முறையையும் இல்லாது ஒழிக்கும் வரை மனி வாழ்வு என்பது இருண்டதாகவும் நிச்சயமற்றதாகவுமே இருக்கும்.



இதற்கு தனி மனிதர்களின் பிரக்ஞையான வாழ்வும் பொறுப்பான செயற்பாடுகளுமே வழிவகுக்கும். ஓவ்வொரு தனிமனிதரிலும் ஏற்படும் மாற்றமே அனைவருக்கும் சம சந்தர்ப்பங்களை உருவாக்கும் ஒவ்வொருவரது தனித்துவங்கைளயும் உரிமைகளையும் மதிக்கும் சமூக மாற்றத்திற்கான முதற்படி. ஆல்லது சமூக மாற்றம் என்பது மனித வாழ்வின் ஒரு கற்பனையாகவே என்றும் இருக்கும் என்பதில் ஆச்சரியமில்லை.

-மீராபாரதி-

No comments: